Skip to main content

Posts

Showing posts from June, 2017

சீரியலில் நடிக்கிறார் பாக்யராஜ்! ஜோடியாக நடிக்க மறுத்த ஹீரோயின்!

ஒருகாலத்தில் அடுக்கடுக்காக வெற்றிகளை மட்டுமே கொடுத்த கே.பாக்யராஜ், இன்றளவும் ‘திரைக்கதை மன்னன்’ என்றே பாராட்டப்படுகிறார். காலம் நல்ல நல்ல மாங்கனிகளை கூட, பஞ்சாமிர்தம் ஆக்கிவிடுவதுதான் கொடுமை. சினிமாவில் அவரது திரைக்கதைக்கு இப்போது மவுசு இல்லை. அவரது மகனுக்கும் நல்ல படங்களை தேர்வு செய்து நடிக்கும் பக்குவம் இல்லை. இருந்தாலும் பழகிய சினிமாவை விட்டுவிட்டு, பட்டுத்துணி விற்கவா போக முடியும்? பெரிய திரையை விட்டுவிட்டு சின்னத்திரைக்குள் என்ட்ரி ஆகிறார் பாக்யராஜ். அவ்வப்போது சின்னத்திரை ஜட்ஜ் ஆக முகம் காட்டியவர், இப்போது சீரியல் ஒன்றில் நடிக்கப் போகிறார். எருது இளைச்சுதுன்னா, குருவி பொண்ணு கேட்குமாம்… அப்படிதான் இவரை சீரியலில் கமிட் பண்ணியவர்கள், உங்கள் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்ணு அனுப்பி வைங்க என்றார்களாம். வேறு வழியில்லை. அனுப்பி வைத்திருக்கிறார் கே.பாக்யராஜ். அதேபோல இந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடிக்க சம்மதித்த ஊர்வசியிடமும், உங்க லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வேணும். ஏன்னா நீங்க இப்ப எப்படி இருக்கீங்கன்னு நாங்க தெரிஞ்சுக்கணும் என்று கேட்கப்பட்டதாம். நான் எப்படியிர

மானை சுற்றி நாலு பெண்கள் கலங்கிய காமெடி சூரி

கும்கி யானை போலிருந்த இசையமைப்பாளர் இமான், குழாப்புட்டு கிண்ணம் போல சின்னதாகிவிட்டார். பட்டினி கிடந்து இளைத்தாரா? படுத்து உருண்டு இளைத்தாரா? என்கிற ரகசியத்தையெல்லாம் வெளியிட அவர் தயாராக இல்லை. ஆனால் ஊரெல்லாம் பேசப்படும் ஒரு விஷயத்திற்கு சரியான பதிலடி கொடுத்தார். அப்படியென்ன பேசியது ஊர்? “இமான் இளைச்சுட்டு வர்றதுக்கு காரணமே அவர் ஜி.வி.பிரகாஷ் மாதிரி நடிக்கப் போறதுதான்…” என்று. அம்மாகிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கும் ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ பட விழா இன்விடேஷனில் இமானும் அவருடன் நாலைந்து இளம் பெண்களும் இருப்பதை போல ஒரு போட்டோவை போட்டுவிட்டார்கள். அவ்வளவுதான்… அவர் நடிக்கப் போறது கன்பார்ம் என்று விவாதத்திற்கு முற்றுப்புள்ளியே வைத்துவிட்டார்கள். ஊர் வாயை மூடுவதற்குள் ஒரு பாட்டுக்கு ட்யூன் போட்டுவிடலாம்தான். இருந்தாலும் வேலை மெனக்கெட்டு அதற்கு விளக்கம் சொன்னார் டி.இமான். “நான் நடிக்கப் போறதில்ல. ஒரு போதும் அப்படி செய்ய மாட்டேன்.” இதன் காரணமாக பலரும் நிம்மதி பெருமூச்சு விட, விழா நடந்த கலைவாணர் அரங்கமே அந்த நிம்மதி மூச்சுக்காற்றால் சூடானது வேறு விஷயம். அதற்கப்புறம் மைக்கை

ஹாலிவுட்டிற்கு செல்லும் 2.0 படம்- என்ன ஒரு பிரம்மாண்ட பிளான்

ரஜினியின் 2.0 பட எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் எப்படி இருக்கிறது என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ரஜினி, ஷங்கர்,  அக்ஷய் முதல் தயாரிப்பு குழு வரை அனைத்துமே படத்திற்கு பிரம்மாண்டம் தான். தற்போது இந்த படத்துக்காக 8 மாதங்களுக்கு முன்பே 100 அடி உயர வெப்பக்காற்று பலூனுக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறார்களாம். வரும் செவ்வாய் கிழமை லாஸ் ஏஞ்சல்ஸில் ஹாலிவுட் விளம்பரத்தில் இந்த பலூனை பறக்கவிடப் போகிறார்களாம். மேலும் லண்டன், துபாய், சான்பிரான்சிஸ்கோ, ஆஸ்திரேலியா, ஐரோப்பா போன்ற நாடுகளிலும் இந்த பலுனை பறக்கவிடப் போகிறார்களாம். இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் இந்த வெப்பக்காற்று பலுனை கொண்டு வர திட்டமிட்டுள்ளார்களாம். அதோடு பல பிரபலங்கள் இந்த பலூனில் சவாரி செய்யப்போவதாக கூறப்படுகிறது.

நடிகை என்றாலே இப்படித்தான் தோன்றுமோ :)

              ''அழகாத்தானே இருக்கு இந்த படம் ?எதுக்கு பிரசுரித்த பத்திரிக்கை மேல் அந்த நடிகை வழக்கு போட்டாராம் ?''                ''கணவர்கள் மற்றும் குழந்தையுடன் ரம்பான்னு  தலைப்பு போட்டால் கோபம் வரத்தானே செய்யும் ?''          (கனவு நாயகியை நீண்ட நாள் கழித்து பார்த்ததால் உண்டான மொக்கை இது ,உண்மையில்லை :) சொன்னால் மட்டும் போதுமா :)                       ''நீங்களே டாக்டர் ,காய்ச்சல் வந்தா எதுக்கு அடுத்த  டாக்டரிடம் போறீங்க ?''              ''செல்ப் மெடிஸின் சாப்பிடுறது தப்பாச்சே !'' முறைப் பொண்ணோட லட்சணம்  அப்படி :)         ''ஓடிப் போற நம்ம பின்னாலே யாரோ தொடர்ந்து வர்ற மாதிரி இருக்கே !''        '' முறைப் பையன்தான் ,நீங்க என் கழுத்துலே  மூணு முடிச்சு போடாம  ஓடிடக் கூடாதுன்னு பின்னாடியே வர்றார்  !'' பயணிகளுக்கு இது வசதிதானே :)             ''அந்த வீடியோ கோச் பஸ், மினி தியேட்டர் மாதிரியே இருக்கு !''            ''ஆடியோ வீடியோ அவ்வளவு நல்லா  இருக்கா ?'

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 14 இல்ல 15 பிரபலங்கள் இவர்கள்தான் - ஆனால் அனைவரையும் கவர்ந்தது தமிழச்சி தான்!

உலகநாயகன் கமல்ஹாசன் முதன்முறையாக சின்னத்திரையில் தொகுத்துவழங்கும் நிகழ்ச்சி Bigg Boss. 14 பிரபலங்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் பிரமாண்ட வீட்டுக்குள்ள எந்தவித தொலைதொடர்பு வசதிகளும் இருக்காது. கழிவறை, குளியலறை தவிர எங்கு திரும்பினாலும் கேமராக்கள் இருக்கும். இதில் கலந்து கொள்ளவிருப்பவர்கள் யாரென்று சில தகவல்கள் தவறாக பரவியது. தற்போது இன்று இந்த நிகழ்ச்சி இன்று ஆரம்பமானது. இதில் கலந்து கொண்டவர்கள் விபரம் அனுயா     வையாபுரி     ஆரார் (சைத்தான் படத்தில் நடித்தவர்)     கஞ்சா கருப்பு     சினேகன்     ஓவியா     ரேசா     பரணி     காயத்ரி ரகுராம்     ஆர்த்தி கணேஷ்     ஜுலி (ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமான தமிழச்சி)     கணேஷ் வெங்கட்ராம்     ஷக்தி வாசுதேவ் 15வதாக நமீதா கலந்து கொண்டார். இவர் தன் மேல் இருக்கும் தவறான எண்ணத்தை மக்கள் மாற்றிக்கொள்ள இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று இதில் கலந்து கொண்டுள்ளாராம். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் சிலர் மக்களுக்கு அதிகம் பரிட்சயப்படாதவர்கள்தான். ஜுலி என்ற பெண்ணை இணையவாசிகளுக்கு மட்டுமே நன்றாக தெரியும். இவர் ஜல்லிக்கட்டு போராட்டத

NEET Result 2017 declared: Check your CBSE NEET 2017 Result on cbseresults.nic.in, cbseneet.nic.in

The Central Board of Secondary Education (CBSE) has declared National Eligibility and Entrance Test NEET Result 2017 on  cbseresults.nic.in  and  cbseneet.nic.in . Last week the Supreme Court had set aside an order by Madras High Court staying the declaration of results and directed CBSE to declare NEET 2017 Result by June 26. Here is how candidates can check their score: > Log on to the websites  cbseresults.nic.in  or  results.gov.in > Click on CBSE NEET UG Result 2017. You will be directed to another page. > Enter important information such as application number, roll number and date of birth > The result will be displayed on the screen. Do not forget to save a copy and take a print out for future reference. The wait for results has been a long-drawn one for students. Results were earlier scheduled to be declared on June 8, but were delayed after the Madras High Court stayed the declaration on a plea alleging lack of uniformity in question paper.

முட்டை பிரியாணியும் மீதி ஒரு ரூபாயும்

ஊ ருக்குச் செல்லும் போது சென்னை சென்ட்ரலில் எப்போதுமே ஒரு “முட்டை பிரியாணி” பஞ்சாயத்து இருக்கும், இந்த முறையும். Image Credit – blog.sagmart.com சென்னை சென்ட்ரலில் இந்திய ரயில்வே அமைப்பின் கீழ் வரும் பிரிவில் ஒரு பகுதியில் தயாராக இருக்கும் உணவுகள் பிரபலம். உணவை தயாராக வைத்து இருப்பார்கள் நாம் வாங்கிக்கொண்டு ரயிலிலோ அல்லது நிலையத்தின் வேறு பகுதியிலோ சென்று சாப்பிடலாம். இங்கே முட்டை, கோழி, ஆடு பிரியாணிகள் மற்றும் பல்வேறு வகையான உணவுகள் உள்ளன. இதில் உள்ள முட்டை பிரியாணியின் விலை 49₹. என்னுடைய விருப்பம் முட்டை பிரியாணி. எனக்கு இங்கே தான் பிரச்சனை. 49₹ என்பதன் நோக்கம் என்ன? மீதி ஒரு ரூபாயை இவர்கள் கொடுக்க மாட்டார்கள் என்று தெரிந்தும் ரயில்வே நிர்வாகம் எதற்கு 50₹ என்று வைக்காமல் 49₹ என்று வைத்துள்ளது என்பது தான் புரியவில்லை. இவர்களே கொள்ளையை ஊக்குவிக்கிறார்களா! இது குறித்துப் புகாரும் அனுப்பினேன் ஆனால், சரியாகவில்லை. மின்னணு பரிவர்த்தனை இது போன்ற இடங்களில் மிக அவசியம். இங்கே ஏன் இல்லை? எப்போதும் எனக்கு இந்த ஒரு ரூபாய்க்காகப் பிரச்சனை தான், இந்த முறையும்.

கூகுள் நமக்குப் பணம் தருகிறது என்பது தெரியுமா?!

கூ குள் தான் எடுக்கும் கணக்கெடுப்புக்கு நமக்குப் பணம் தருகிறது ஆனால், அதை நாம் Google Play Store தவிர்த்து வேறு எங்கும் செலவு செய்ய முடியாது. Google Play Store ல் நமக்கு விருப்பப்பட்ட Apps, Movies போன்ற அவர்கள் அனுமதிக்கும் சேவைகளை, கொடுக்கப்பட்ட கால அளவுக்குள் இந்தத் தொகையைப் பயன்படுத்திப் பெற்றுக் கொள்ளலாம். Image Credit – Hip2Save.com இதில் நாம் பதில் அளித்தால், கூகுள் தோராயமாக 10₹ முதல் நமக்குத் தருகிறது. எனக்கு மூன்று கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு 30.77 ₹ கொடுத்துள்ளது. கூகுள் ஏன் நமக்குப் பணம் தர வேண்டும்? ஆதாயம் இல்லாமல் எவரும் எவருக்கும் எதையும் இலவசமாகத் தர மாட்டார்கள். கூகுளும் விதிவிலக்கல்ல. கூகுள் இதற்கென்று ஆட்களை நியமித்துக் கணக்கெடுத்து ஆய்வு நடத்தி செய்வதற்கு ஆகும் செலவு மிக அதிகம் ஆனால், அதே தன்னுடைய பயனாளர்கள் மூலமாக ஆய்வுகளை நடத்தினால் செலவு குறைவு. இந்த ஆய்வுகள் மூலம் கிடைக்கும் தகவல்களை வைத்து, தன்னுடைய நிறுவனத்தின் தேவைகளை, மாற்றங்களைச் செயல்படுத்தி மேம்படுத்த நினைக்கிறது. பணம் கிடைக்கிறது என்றால், யாருமே இதில் கலந்து தங்கள் கருத்தை

குழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்

                குழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன்னோர்கள் பெயர் வைப்பதா , சாமி பெயரா ?இல்லை யாருக்கும் புரியாத மார்டன் பெயரா என பட்டிமன்றமே நடக்கும் . இந்த நேரத்தில் நமக்கு தேவையான , வித்தியாசமான பெயர்களை தருவதற்கு பல இனிய தளங்கள் உள்ளன . அவற்றை இன்று பார்க்கலாம் .  TAMILCUBE:               இது பல்வேறு இணைய பயன்பாட்டினை வழங்கி வரும் தளமாகும் .புத்தகங்கள் , பொது அறிவு , ஜோதிடம் என பல தகவல்கள் இதில் உண்டு அதில் ஒன்றுதான் குழந்தைகள் பெயர்கள் .      இந்த தளம் செல்ல :  CLICK HERE   வலைத்தமிழ் :   முன்பு பார்த்த தளம் போல் இதுவும் பல்வேறு வசதிகள் வழங்கும் தளம்தான் . இதில் சினிமா , அரசியல் , இலக்கியம் என பல் வகை செய்திகள்   உண்டு . இது ஒரு நல்ல பொழுதுபோக்கு தளம் . இதில் நமக்கு தேவையான எழுத்தில் குழந்தைகள் பெயர்களை தேட முடியும் .    இந்த தளம் செல்ல :  CLICK HERE    களஞ்சியம் :           குழந்தைக்கு தமிழில் தான் பெயர் வைக்க வேண்டும் என விரும்பும் நபர்களுக்காக உருவாக

ANDROID PHONE இல் அழிந்த போட்டோ வீடியோகளை மீண்டும் எடுக்க சிறந்த அப்ளிகேஷன்

                 இன்றைய காலகட்டத்தில் ஆண்ட்ராய்ட் போன் பயபடுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. சாதரணமாக பேச மட்டும் பயன்பட்ட போன் இப்போது சகலவிதங்களிலும் பயன்படுகிறது. போட்டோ வீடியோ என தினமும் எடுத்து மகிழ்கிறோம்.   ஏதாவது ஒரு காரணத்தால் (வைரஸ், தவறாக அழித்தல் , உடைத்தல் ) நீங்கள் எடுத்த அறிய புகைப்படங்கள் அழிய வாய்ப்புள்ளது. இந்த நிலையில் அந்த புகைப்படங்களை திரும்ப பெற பல அப்ளிகேஷன்கள் நமக்கு உதவுகின்றது. அத்தகைய அப்ளிகேஷங்களில் சிறந்த சிலவற்றை இப்போது பார்ப்போம் . 1.   Deleted Photo Recovery 2017          வெறும் 7 MB அளவுள்ள அப்ளிகேஷன் இது. இதன் மூலம் உங்கள் அழிந்த போட்டோகளை திரும்ப பெற முடியும். இது ரூட் செய்யாத போனில் கூட பயன்படுத்தும் வகையில் உள்ளது .   Version:  1.1 (1) for Android 2.3.2+ (Gingerbread, API 9) தரவிறக்கம் செய்ய :  download here  2.   Android Cellphone Photo Video Music Recovery APK             இது I-CARE DATA RECOVERY நிறுவனத்தின் மிக சிறந்த படைப்பாகும். இதை உங்கள் போன் மற்றும் கணினி மூலம் இயக்க முடியும். அழிந்

ஸ்டிக்கர் சாதனையில் லேடியை முறியடித்த மோடி !

ஸ் டிக்கர் ஒட்டிக் கொள்வதில் இந்த உலகத்தில் யாராலும் புரட்சித் தலைவி மாண்புமிகு அம்மாவை விஞ்ச முடியாது என்கிற அதிமுக அடிமைகளின் பெருமையில் மண் விழுந்துள்ளது. சென்னை வெள்ளத்தின் போது வேறு மாவட்டங்களில் இருந்து வந்த உதவிப் பொருட்களின் மீது தனது மூஞ்சியை ஒட்டி பெருந்தன்மை என்னவென்று இந்தியாவுக்கே பாடமெடுத்தார் ஜெயா. ஆனால், அவரது ஸ்டிக்கர் சாதனையை மோடி தற்போது விஞ்சியுள்ளார் – வேறு ஒரு நாட்டின் மீதே தனது ஸ்டிக்கரை ஒட்டி உலகத்தையே மலைக்க வைத்துள்ளார். பதவிக்கு வந்து மூன்றாண்டுகள் ஆனதைத் தொடர்ந்து மோடியின் சாதனைகளை நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லியாக வேண்டிய கௌரவப் பிரச்சினையில் மோடி அரசு உள்ளது. இதற்காக ஒவ்வொரு அமைச்சகமும் தாம் செய்த சாதனைகளை பூதக் கண்ணாடி மூலம் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அந்தவகையில் மத்திய உள்துறை அமைச்சகம் சாதனைகளை வலைவீசித் தேடி சிலவற்றை ஒப்பேற்றியுள்ளது. அடுத்த நாட்டு எல்லையை தனது எல்லையாக காட்டும் மோசடி அயோக்கியத்தனம் அதாவது ஊடுருவலைத் தடுக்க பாகிஸ்தான் இந்தியா எல்லைக் கோடு நெடுக ஒளிவிளக்குகள் அமைக்கப்பட்டது என்பது தேடிக் கண்டுபிடிக்கப்பட்ட சாதனைகளில் ஒ

அரசியலுக்கு வருகிறார் ரஜினி: திட்டங்கள், கொள்கைகள் தயாரிப்பில் தீவிரம்'

இந்த முறை ரஜினி அரசியலுக்கு வருவதை கடவுள் தீர்மானித்துவிட்டார். போர் வரும் வரை எல்லாம் காத்திருக்க வேண்டாம் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். மே 15- 19-ம் தேதி வரை ரஜினி ரசிகர்களோடு நடத்திய சந்திப்பும், அதில் ரஜினி பேசிய பேச்சும் தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் இன்றளவும் பேசு பொருளாக இருந்துவருகிறது. "ஜனநாயகம் கெட்டுப் போய் இருக்கிறது. அரசியல் பற்றி, ஜனநாயகம் பற்றி மக்களின் மன ஓட்டமே மாறி இருக்கிறது. முதலில் ஜனநாயகத்தை மாற்ற வேண்டும். மக்களின் மனநிலையை மாற்ற வேண்டும். அப்போதுதான் நாடு உருப்படும். அது அனைவருமே சேர்ந்து செய்ய வேண்டியது. எனக்கும் கடமைகள், தொழில் மற்றும் வேலை இருக்கிறது. உங்களுக்கும் கடமைகள், தொழில் மற்றும் வேலை இருக்கிறது. உங்களுடைய கடமைகளைச் செய்துகொண்டே இருங்கள். போர் வரும் போது பார்த்துக் கொள்வோம். ஆண்டவன் இருக்கிறான்" என்று ரசிகர்களுடனான இறுதிநாள் சந்திப்பில் ரஜினி பேசியது ஹைலைட்டாக இருந்தது. ரசிகர்களுடனான சந்திப்பு முடிந்தவுடன் 'காலா' படத்தின் படப்பிடிப்புக்காக மும்பைக்குப் பயணமானார் ரஜினி. முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு, சென்னை திரு