ஆண்களை அதிகம் தாக்கும் ப்ரோஸ்டேட் புற்று நோயின் அறிகுறிகளும் , வராமல் தடுக்கும் உணவுகளும்!! புற்று நோய் என்பது உயிரை குடிக்கும் நோய் என்ற எண்ணம் மக்கள் மனத்தில் பரவியுள்ளது. இந்த எண்ணத்தை மனதில் இருந்து அழிக்க வேண்டும். எல்லா வகைப் புற்று நோய்களும் இறப்பை ஏற்படுத்துவது இல்லை. மற்றும் கட்டிகள் எல்லாம் புற்று நோயின் அறிகுறி இல்லை. அதிக வீரியம் உள்ள கட்டிகள் , வேகமாக பரவ கூடிய கட்டிகள் தான் புற்று நோய் கட்டிகள். மற்ற கட்டிகள் சாதாரணமானதுதான். பொதுவாக பெண்களை அதிகமாக தாக்குவது மார்பக புற்று நோய். அதே போல் ஆண்களை அதிகமாக தாக்கும் புற்று நோய் , ஆண்மை சுரப்பி புற்று நோய். இதனை ப்ரோஸ்டேட் கேன்சர் என்று கூறுவர். கடந்த 20 வருடங்களில், இந்தியாவிலும் , மற்ற ஆசிய நாடுகளிலும் இந்த புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது ப்ரோஸ்டேட் என்னும் சுரப்பியில் உண்டாகும் புற்று நோய். இந்த சுரப்பி, சிறுநீர்ப்பைக்கு கீழும், மலக்குடலுக்கு முன்னும் உள்ளது. பொதுவாக இந்த புற்று நோய் பற்றிய தகவல் பலருக்கும் தெரிவதில்லை. அதை பற்றிய பலரும் அறிந்து கொள்ளும் வாய்ப்பை இந்த பதிவு கொடுக்கு...
Stay positive and happy. Work hard and don't give up hope. Be open to criticism and keep learning. Surround yourself with happy, warm and genuine people.