நிழலை பார்த்தாலே மருண்டு நிற்கும் குழந்தைகள் கூட, இப்போதெல்லாம் பேய் படங்கள் என்றால் குஷாலாக தியேட்டருக்கு கிளம்பிவிடுகிறார்கள்! ‘இங்கு குறைந்த விலையில் வேப்பிலை அடிக்கப்படும். ஒரு பேயை கூட்டி வந்தால் இன்னொரு பேய்க்கு இலவச வைத்தியம்’ என்று போர்டு போடாத குறையாக தொழில் டல்லாகி கிடக்கிறார்கள் பேய் ஓட்டுகிற பூசாரிகள். இவ்வளவுக்கும் காரணம்… இந்த பேய்ப்பட இயக்குனர்கள்தான். “பயப்படாத… நம்ம பயதான். நாலு நாளைக்கு முன்னாடி செத்து இன்னைக்கு பேயா வந்திருக்கான். நல்லா சிரிப்பான். நல்லா சிரிப்பு மூட்டுவான்” என்று சின்ன குழந்தைகளிடமிருந்த பேய் பயத்தையெல்லாம் உடைத்து சிதைத்துவிட்டார்கள். அதிலும் சமீபத்தில் வந்த ‘மரகத நாணயம்’ படத்திற்கு நாடு முழுக்க பலத்த அப்ளாஸ். குறிப்பாக குட்டீஸ்களின் ஏரியாவில் ஒரே குதூகலம்! இப்படி சுடுகாட்டு சாம்பலில் சுரைக்காய் புட்டு செஞ்சு அதையும் கப்புல போட்டு கனக் கச்சிதமா யாவாரம் பண்ணிய ‘மரகத நாணயம்’ படத் தயாரிப்பாளர் டில்லிபாபுவுக்கும், அப்படத்தை இயக்கிய ஏஆர்கே சரவணுக்கும் இன்டஸ்ட்ரியில் எக்கச்சக்க மரியாதை! ஏனிந்த மரியாதை? பின்னே சும்மாவா…? ரிலீஸ் ஆன நாளிலிருந்தே தமிழகத்...
Stay positive and happy. Work hard and don't give up hope. Be open to criticism and keep learning. Surround yourself with happy, warm and genuine people.