Skip to main content

Posts

Showing posts with the label Serious

கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி!

உடல்நலக்குறைவு காரணமாக கவிஞர் வைரமுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவின் மிக முக்கியமான பாடலாசியர்களில் ஒருவரான வைரமுத்து மிகச்சிறந்த கவிஞரும் கூட. இவர் ஏழு முறை தேசிய விருது வென்ற பாடலாசிரியர். 1980 முதல் தற்போது வரை சுமார் 40 ஆண்டுகளாக தொடர்ந்து பாடல்கள் எழுதி வருகிறார். கவிதை, சிறுகதைகள், நாவல் என பல்வேறு புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். தற்போது சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார் வைரமுத்து. Vairamuthu Hospitalized டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் வைரமுத்துவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. Vairamuthu Serious இருதய நோய் சிகிச்சைக்காக சென்னை ஆயிரம் விளக்கும் அப்போலோ மருத்துவமனையில் வைரமுத்து உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.