நடிகர் விஜய் சேதுபதி தன் தனித்திறமையால் அனைவரையும் கவர்ந்து வருகிறார். படத்திற்கு படம் இவரின் நடிப்பில் வித்தியாசம் தெரிவதை காணமுடிகிறது. மக்கள் செல்வனாக இருப்பதற்கும் காரணம் அதுவே. வித்தியாசமான கதைகளையும், கேரக்டர்களையும் தேடிப்பிடித்து நடிப்பதே இவரின் ஸ்டைல். இதில் தற்போது ஆறுமுக குமார் இயக்கத்தில் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தில் நடித்து வருகிறார். இது குறித்து பேசியுள்ள இயக்குனர் விஜய் சேதுபதியின் நடிப்பை பார்த்து வியந்து விட்டேன். அவருக்கு சுவாரசியமான கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது. சவாலான ரோலை மிக எளிமையாக கையாண்டுள்ளார். படத்தில் பழங்குடி இன தலைவராக நடித்திருக்கும் விஜய் சேதுபதி 8 விதமான தோற்றங்களில் நடித்துள்ளார் என அவர் கூறியுள்ளார். சாகசம் நிறைந்த காமெடி படமான இது அவரது படங்களில் மிக முக்கியமானதாக இருக்கும் என சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
Stay positive and happy. Work hard and don't give up hope. Be open to criticism and keep learning. Surround yourself with happy, warm and genuine people.