அடிப்படை சம்பளமாக குறைந்தது ரூ.25,000 பெறும் ஒருவர் தன் ஓய்வுக் காலத்திற்காக ரூ.1 கோடி அல்லது அதற்கு மேல் வரை சேமிக்க முடியும். மாத வருமானம் பெறும் ஒவ்வொருவருடைய அடிப்படை சம்பளத் தொகையிலிருந்து 12 சதவீதம் பிராவிடண்ட் ஃபண்டுக்குச் செல்கிறது. அதே தொகையை அவர் பணியாற்றும் நிறுவனமும் அவருக்குக் கொடுக்கும். அதன் அடிப்படையில், பெரும்பாலானோர் 25 ஆண்டுகளில் ரூ.50 லட்சத்தை எளிதாகச் சேமிக்க முடியும். பின் எப்படி ரூ.1 கோடியை எட்டுவது என்பதுதான் கேள்விக்குறி. கொஞ்சம் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டால் இதுவும் சாத்தியம்தான். ஒருவர் பணியாற்றும் நிறுவனம் அளிக்கும் தொகையில் 8.33 சதவீதத் தொகை (ரூ.1,250) ஈ.பி.எஸ். திட்டத்திற்குச் சென்று விடுவதால், எஞ்சும் ரூ.1,750 மட்டுமே பிராவிடண்ட் ஃபண்ட்டுக்குச் செல்லும். இந்த சேமிப்புகளுடன், எஸ்.ஐ.பி. மியூச்சுவல் ஃபண்டுகளில் 25 ஆண்டுகளுக்கு முதலீடு செய்வதன் மூலம் மேலும் ரூ.50 லட்சத்தை சேமிக்க முடியும் என்கிறார்கள் வல்லுனர்கள். எஸ்.ஐ.பி. மியூச்சுவல் ஃபண்டில் ஒவ்வொரு மாதமும் ரூ.2,600 என்ற கணக்கில், ஆண்டுக்கு 12 சதவீத வளர்ச்சி விகிதத்தில், 25 ஆண்ட...
Stay positive and happy. Work hard and don't give up hope. Be open to criticism and keep learning. Surround yourself with happy, warm and genuine people.