நோயெதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்க இந்த 2 பொருளையும் ஒன்னா சாப்பிட்டாலே போதுமாம்! என்ன தெரியுமா?..
இன்றைய சூழ்நிலையில் பல்வேறு நோய்கள் நம்மை எளிதில் வந்து தாக்க காரணமாக இருப்பது நாம் உண்ணும் உணவுகளே. அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள், சக்கரை நிறைந்த பானங்கள், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்ற நோய்களை தானே உருவாக்கும் உணவுகளை தான் இன்று நாம் தேடி தேடி உண்ணுகின்றோம். இதனால் முதலில் பாதிப்படைவத நமது நோய் எதிர்ப்பு சக்தியே. தற்போதைய சூழ்நிலையினால் ஒவ்வொருவரும் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியுள்ளாம். ஒருவரது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு வண்ணமயமான மாத்திரைகளை விழுங்குவதற்கு பதிலாக, ஊட்டச்சத்துக்க நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பதே சிறந்தது என்று சொல்லப்படுகின்றது. இப்போதே வாங்கவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு வரிசையில் பொட்டுக்கடலையும் ஒன்றாகும். இது எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி புரிகின்றது என்று கருதப்படுகின்றது. ஏனெனில் இதில் புரோட்டீன் மட்டுமின்றி, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான வைட்டமின் பி6, வைட்டமின் சி, ஃபோலேட், நியாசின், தியாமின், ரிபோஃப்ளேவின், மாங்கனீசு, பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் காப்பர் போன்றவைய...