தமிழகத்தில் அடுத்தகட்ட பொதுமுடக்க தளர்வுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு தழுவிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதன்பின் நிபுணர்கள் ஆலோசனைப்படி அக்டோபர் 31ஆம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் பொதுமுடக்கம் தொடர்ந்தது. இந்நிலையில், அடுத்தகட்ட தளர்வுகளுடன் பொதுமுடக்கத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது. Featured deals தமிழக அரசின் புதிய தளர்வுகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை (containment zones) தவிர மற்ற அனைத்து இடங்களுக்கும் பொருந்தும். பள்ளிகள் திறப்பு 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள், அனைத்து கல்லூரிகள், ஆராய்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நவம்பர் 16ஆம் தேதி முதல் வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும் நவம்பர் 16 முதல் செயல்பட அனுமதி. கோயம்பேடு வணிக வளாகம் தற்காலிக இடத்தில் தற்போது செயல்படும் பழக்கடை மொத்த வியாபாரம் நவம்பர் 2 முதல் செயல்படவும், பழம் மற்றும் காய்கறி சில்லரை வியாப...
Stay positive and happy. Work hard and don't give up hope. Be open to criticism and keep learning. Surround yourself with happy, warm and genuine people.