Skip to main content

மானை சுற்றி நாலு பெண்கள் கலங்கிய காமெடி சூரி

கும்கி யானை போலிருந்த இசையமைப்பாளர் இமான், குழாப்புட்டு கிண்ணம் போல சின்னதாகிவிட்டார். பட்டினி கிடந்து இளைத்தாரா? படுத்து உருண்டு இளைத்தாரா? என்கிற ரகசியத்தையெல்லாம் வெளியிட அவர் தயாராக இல்லை. ஆனால் ஊரெல்லாம் பேசப்படும் ஒரு விஷயத்திற்கு சரியான பதிலடி கொடுத்தார். அப்படியென்ன பேசியது ஊர்? “இமான் இளைச்சுட்டு வர்றதுக்கு காரணமே அவர் ஜி.வி.பிரகாஷ் மாதிரி நடிக்கப் போறதுதான்…”

என்று.

அம்மாகிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கும் ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ பட விழா இன்விடேஷனில் இமானும் அவருடன் நாலைந்து இளம் பெண்களும் இருப்பதை போல ஒரு போட்டோவை போட்டுவிட்டார்கள். அவ்வளவுதான்… அவர் நடிக்கப் போறது கன்பார்ம் என்று விவாதத்திற்கு முற்றுப்புள்ளியே வைத்துவிட்டார்கள். ஊர் வாயை மூடுவதற்குள் ஒரு பாட்டுக்கு ட்யூன் போட்டுவிடலாம்தான். இருந்தாலும் வேலை மெனக்கெட்டு அதற்கு விளக்கம் சொன்னார் டி.இமான். “நான் நடிக்கப் போறதில்ல. ஒரு போதும் அப்படி செய்ய மாட்டேன்.”

இதன் காரணமாக பலரும் நிம்மதி பெருமூச்சு விட, விழா நடந்த கலைவாணர் அரங்கமே அந்த நிம்மதி மூச்சுக்காற்றால் சூடானது வேறு விஷயம்.

அதற்கப்புறம் மைக்கை பிடித்த நகைச்சுவை நடிகர் சூரி, “நல்லவேளை… அவரு நடிக்கலேன்னு சொன்னார். ஒருவேளை அவர் நடிக்க வந்திருந்தா, நாங்க ஆர்மோனிய பொட்டியை கைப்பற்றி அதுல ட்யூன் போட ஆரம்பிச்சுருப்போம்” என்று சொல்ல, விழா அரங்கமே கலீர்!

அதர்வா, ரெஜினா கசன்ட்ரா, அதிதி போகன்ஹர் நடித்திருக்கும் இப்படத்தை ஓடம் இளவரசு இயக்கியிருக்கிறார். 

Comments

Popular posts from this blog

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க...

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க... யாருக்கு தான் இந்த ஆசை இருக்காது. நாமும் நல்ல வசதியோடு எந்த கஷ்டமும் இல்லாம, அள்ள அள்ள பணம் குறையாம இருக்கணும்னு. ஆனால் நம்மில் பெரும்பாலானோர் அப்படி ஆசைப்படுவதோடு நிறுத்தி விடுகிறோம். அதற்கான முயற்சிகளை எடுப்பதே இல்லை. தொழில் விருத்தி சிலருக்கு வாழ்க்கையில் நல்ல தொழில் இருக்கும். அதை விருத்தி செய்ய எல்லா விதமான முயற்சிகளையும் செய்து கொண்டே இருப்பார்கள். ஆனாலும் அதிர்ஷ்டம் என்பது கடவுள் நம்பிக்கை என்பதுவும் கூட முக்கியமல்லவா?... அதனாலேயே சிலருடைய அவ நம்பிக்கையால் தான் என்ன முயற்சி செய்தாலும் அது வெற்றியடையாமலோ அல்லது கால தாமதமோ ஆகிவிடுகிறது தன லாபம் உங்களுடைய வீட்டில் எப்போதும் தன ஆகர்ஷணம் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டுமென்றால்அதற்கு சின்ன சின்ன பரிகாரங்கள் உள்ளன. அதை முழு மனதோடு நம்பி செய்தாலே போதும் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாமல் இருந்து கொண்டே இருக்கும். அப்படி என்ன பரிகாரங்கள் என்ன வேண்டும் என்று பார்ப்போம். பரிகாரம்  சின்ன சின்ன தெய்வா...

தஞ்சாவூர்-கும்பகோணம் பைபாஸ் ரைடர்ஸ் பஸ் இயக்கம்

இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே  தேசிய நெடுஞ்சாலை வழியாக புதிய நேரடி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பயண நேரம் வெகுவாக குறைந்துள்ளது. இதை மக்கள் மற்றும் பயணிகள் வரவேற்றுள்ளனர்.  தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும். இதனால் இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. இந்த பேருந்து சேவை ஒரு நாளைக்கு 18 முறை இயக்கப்படுகிறது. கும்பகோணத்தில் இருந்து காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பேருந்து புறப்படும். தஞ்சாவூரில் இருந்து காலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை பேருந்து இயக்கப்படும். இந்த புதிய பேருந்துகள் "பைபாஸ் ரைடர்ஸ்" சேவையின் ஒரு பகுதியாக இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் NH 36-ல் தஞ்சாவூர் - சோழபுரம் இடையே இயக்கப்படுகின்றன. 50 கி.மீ தூரத்தை இப...

மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்!

  மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்! மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் செம்மங்குளம் அருகே தனியார் பள்ளியில் சிறுத்தை முகாமிட்டிருப்பதால் அப்பள்ளிக்கு இன்று விடுமுறையை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் அருகே பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் திடீரென சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. தற்போது சிறுத்தையின் நடமாட்டத்தை சிசிடிவி கேமரா மூலம் வனத்துறையினரும் கல்வித் துறை அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் அங்கும் இங்குமாக சிறுத்தை நடமாடிக் கொண்டே இருக்கிறது.