Skip to main content

முட்டை பிரியாணியும் மீதி ஒரு ரூபாயும்

IRCTC-E-catering-service

ருக்குச் செல்லும் போது சென்னை சென்ட்ரலில் எப்போதுமே ஒரு “முட்டை பிரியாணி” பஞ்சாயத்து இருக்கும், இந்த முறையும். Image Credit – blog.sagmart.com
சென்னை சென்ட்ரலில் இந்திய ரயில்வே அமைப்பின் கீழ் வரும் பிரிவில் ஒரு பகுதியில் தயாராக இருக்கும் உணவுகள் பிரபலம்.
உணவை தயாராக வைத்து இருப்பார்கள் நாம் வாங்கிக்கொண்டு ரயிலிலோ அல்லது நிலையத்தின் வேறு பகுதியிலோ சென்று சாப்பிடலாம்.
இங்கே முட்டை, கோழி, ஆடு பிரியாணிகள்
மற்றும் பல்வேறு வகையான உணவுகள் உள்ளன. இதில் உள்ள முட்டை பிரியாணியின் விலை 49₹. என்னுடைய விருப்பம் முட்டை பிரியாணி.
எனக்கு இங்கே தான் பிரச்சனை.
49₹ என்பதன் நோக்கம் என்ன?
மீதி ஒரு ரூபாயை இவர்கள் கொடுக்க
மாட்டார்கள் என்று தெரிந்தும் ரயில்வே நிர்வாகம் எதற்கு 50₹ என்று வைக்காமல் 49₹ என்று வைத்துள்ளது என்பது தான் புரியவில்லை.
இவர்களே கொள்ளையை ஊக்குவிக்கிறார்களா!
இது குறித்துப் புகாரும் அனுப்பினேன் ஆனால், சரியாகவில்லை.
மின்னணு பரிவர்த்தனை இது போன்ற இடங்களில் மிக அவசியம். இங்கே ஏன் இல்லை?
எப்போதும் எனக்கு இந்த ஒரு ரூபாய்க்காகப் பிரச்சனை தான், இந்த முறையும்.
முன்பு ஒரு ரூபாயை கேட்க கூச்சமாக இருக்கும்.. ஏனென்றால், இதைக் கேட்டால் அவர்கள் எப்படிப் பார்ப்பார்கள் என்பது தெரியும்.
சமீபமாக இது குறைந்து இதைக் கேட்பதே ஒரு உற்சாகமான நிகழ்வாக எனக்கு மாறி விட்டது 🙂 .
மீதியா? அப்படின்னா?!
இந்த முறையும் முட்டை பிரியாணி வாங்கிக்கொண்டு 50₹ ரூபாயை நீட்டினேன். பிரியாணியைக் கொடுத்தார், நானும் அவரையே பார்த்துக்கொண்டு இருந்தேன்.
எவ்வளவு கொடுத்தீங்க? 
50 ருபாய்!
அதான் பிரியாணி கொடுத்துட்டேனே!
மீதி ஒரு ருபாய்?
ஏற இறங்க பார்த்தார்..
நானும் “என்ன?” என்பது போலப் பார்த்துக்கொண்டு இருந்தேன்.
ஒரு மிட்டாயை நீட்டினார்.
ஒரு இடத்தில் தெரிவது போலச் சில்லறையை வைத்து இருந்தார்.
அங்கே தான் சில்லறை இருக்குல்ல.. எதுக்கு மிட்டாய் தரீங்க? 
2 ருபாய் எடுத்து.. “ம்ஹீம்.. இந்தா வைத்துக்கோ” என்று வேண்டா வெறுப்பா பிச்சை போடுவது போலக் கொடுத்தார்.
இப்படிக் கொடுத்தால் நான் ரோசம் வந்து அவரிடமே கொடுப்பேன் என்று நினைத்தாரோ என்னவோ.. 🙂 .
நான் எதுவும் கூறாமல் வாங்கி விட்டேன்.
கொஞ்சம் அதிர்ந்து
சரி கொடுங்க” அதை என்று திரும்ப வாங்கி விட்டு.. மேலேயே இருந்த ஒரு ரூபாயை எடுத்துக் கொடுத்தார்.
த்தா.. போடாங்க.. என்று வாங்கிக் கொண்டு நான் கிளம்பி விட்டேன்.
இவங்களோட ஒரு ரூபாயை கூட விடக்கூடாது என்று நினைக்கிறார்கள் ஆனால், பயணிகள் ஒரு ரூபாயை அது பற்றிய உணர்வே இல்லாமல் வாங்கி வைத்துக்கொள்கிறார்கள்.
இந்த ஆளு கூட நான் என்ன குடும்பமா நடத்தப் போறேன்.. இவன் யாரோ நான் யாரோ.. இவன் என்னைப் பற்றி என்ன நினைத்தால் எனக்கென்ன?!
ஒரு ருபாய் பெரிய விசயமில்லை.. ஆனால், இது போல விட்டுத்தரக்கூடாது, நாமே இந்தத் திருட்டுப் பசங்களை ஊக்குவிக்கக்கூடாது என்ற கடுப்பே இது போல நிற்கக் காரணம்.
அவமானமாக நினைக்க வேண்டியது நாமல்ல..
நான் யாரையும் கொள்ளை அடிக்கவில்லை, யாரையும் ஏமாற்றவில்லை, லஞ்சம் வாங்கியதில்லை.. நான் சம்பாதிப்பது அனைத்துமே நான் நேர்மையாகச் சம்பாதித்தது.
அப்படி இருக்க..
எவனோ ஒரு திருட்டு பய எதோ நினைப்பான் என்று நம் உரிமையை ஏன் விட்டுத்தரனும்! அவன் என்ன நினைத்தால் நமக்கென்ன?
அவன் நினைப்பதால் என்ன நடந்து விடப் போகிறது?!
திருடுபவன் தைரியமாக கொடுக்க மறுக்கிறான்.. நம்ம பணத்தை வாங்க நாம் கூச்சப்படுகிறோம். கொடுமை!
இங்கே மட்டுமில்லை.. பல இடங்களில் இது போலக் கேட்டுச் சண்டை போட்டு இருக்கிறேன். முன்பு கூச்சமாக இருந்தது.. தற்போது பெருமிதமாக இருக்கிறது.
நண்பர் மாயவரத்தான் ரமேஷை இந்த விசயத்தில் ரொம்பப் பிடிக்கும். செம்ம சண்டை போட்டு அவர் உரிமையை நிலை நாட்டுவார். எனக்கு இந்த விசயத்தில் நல்ல ஒரு முன்மாதிரி.
இவர் அளவுக்கு என்னால் சத்தியமாக முடியாது.. இருப்பினும் முடிந்த அளவுக்கு முயல்கிறேன்.
கடினப்பட்டுச் சம்பாதிக்கிறவனுக்குத் தான் பணத்தோட அருமை தெரியும் என்பார்கள். உண்மை! எனக்குப் பணத்தோட அருமை தெரியும்.
நமக்குச் சம்பந்தமில்லை என்றாலும் வீண் செய்யக்கூடாது
தேவையானதுக்கு எவ்வளவு வேண்டும் என்றாலும் செலவு செய்யலாம் நம் வருமானம் அனுமதிக்கும் வரை, அதே சமயம் பணம் இருக்கிறது என்பதற்காகப் பணம் என்றில்லை தண்ணீர் மின்சாரம் என்று எதையும் விரயம் செய்யக் கூடாது.
இந்த விசயங்களில் மட்டுமல்ல பல இடங்களில் சண்டைப் போட்டு எனக்கான உரிமையை மீட்டு இருக்கிறேன். இனியும் தொடரப்போகிறேன் மகிழ்ச்சியாக.
ஒரு ருபாய் என்றாலும் அது நம் பணம், விட்டுத்தராதீர்கள். உழைப்பின் அருமை தெரிந்தால், இந்த ஒரு ரூபாயின் மதிப்பும் உங்களுக்குத் தெரிந்து இருக்கும்.
ரயிலில் ஏறிய பிறகு மனைவியுடன் பேசும் போது “இன்னைக்கு ஒரு பஞ்சாயத்து” என்றேன்..
என்ன.. முட்டை பிரியாணியா!” என்றார் 🙂 .

Comments

Popular posts from this blog

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க...

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க... யாருக்கு தான் இந்த ஆசை இருக்காது. நாமும் நல்ல வசதியோடு எந்த கஷ்டமும் இல்லாம, அள்ள அள்ள பணம் குறையாம இருக்கணும்னு. ஆனால் நம்மில் பெரும்பாலானோர் அப்படி ஆசைப்படுவதோடு நிறுத்தி விடுகிறோம். அதற்கான முயற்சிகளை எடுப்பதே இல்லை. தொழில் விருத்தி சிலருக்கு வாழ்க்கையில் நல்ல தொழில் இருக்கும். அதை விருத்தி செய்ய எல்லா விதமான முயற்சிகளையும் செய்து கொண்டே இருப்பார்கள். ஆனாலும் அதிர்ஷ்டம் என்பது கடவுள் நம்பிக்கை என்பதுவும் கூட முக்கியமல்லவா?... அதனாலேயே சிலருடைய அவ நம்பிக்கையால் தான் என்ன முயற்சி செய்தாலும் அது வெற்றியடையாமலோ அல்லது கால தாமதமோ ஆகிவிடுகிறது தன லாபம் உங்களுடைய வீட்டில் எப்போதும் தன ஆகர்ஷணம் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டுமென்றால்அதற்கு சின்ன சின்ன பரிகாரங்கள் உள்ளன. அதை முழு மனதோடு நம்பி செய்தாலே போதும் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாமல் இருந்து கொண்டே இருக்கும். அப்படி என்ன பரிகாரங்கள் என்ன வேண்டும் என்று பார்ப்போம். பரிகாரம்  சின்ன சின்ன தெய்வா...

தஞ்சாவூர்-கும்பகோணம் பைபாஸ் ரைடர்ஸ் பஸ் இயக்கம்

இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே  தேசிய நெடுஞ்சாலை வழியாக புதிய நேரடி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பயண நேரம் வெகுவாக குறைந்துள்ளது. இதை மக்கள் மற்றும் பயணிகள் வரவேற்றுள்ளனர்.  தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும். இதனால் இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. இந்த பேருந்து சேவை ஒரு நாளைக்கு 18 முறை இயக்கப்படுகிறது. கும்பகோணத்தில் இருந்து காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பேருந்து புறப்படும். தஞ்சாவூரில் இருந்து காலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை பேருந்து இயக்கப்படும். இந்த புதிய பேருந்துகள் "பைபாஸ் ரைடர்ஸ்" சேவையின் ஒரு பகுதியாக இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் NH 36-ல் தஞ்சாவூர் - சோழபுரம் இடையே இயக்கப்படுகின்றன. 50 கி.மீ தூரத்தை இப...

மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்!

  மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்! மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் செம்மங்குளம் அருகே தனியார் பள்ளியில் சிறுத்தை முகாமிட்டிருப்பதால் அப்பள்ளிக்கு இன்று விடுமுறையை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் அருகே பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் திடீரென சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. தற்போது சிறுத்தையின் நடமாட்டத்தை சிசிடிவி கேமரா மூலம் வனத்துறையினரும் கல்வித் துறை அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் அங்கும் இங்குமாக சிறுத்தை நடமாடிக் கொண்டே இருக்கிறது.