Skip to main content

கூகுள் நமக்குப் பணம் தருகிறது என்பது தெரியுமா?!

Google Opinion Rewards
கூகுள் தான் எடுக்கும் கணக்கெடுப்புக்கு நமக்குப் பணம் தருகிறது ஆனால், அதை நாம் Google Play Store தவிர்த்து வேறு எங்கும் செலவு செய்ய முடியாது.
Google Play Store ல் நமக்கு விருப்பப்பட்ட Apps, Movies போன்ற அவர்கள் அனுமதிக்கும் சேவைகளை, கொடுக்கப்பட்ட கால அளவுக்குள் இந்தத் தொகையைப் பயன்படுத்திப் பெற்றுக் கொள்ளலாம். Image Credit – Hip2Save.com
இதில் நாம் பதில் அளித்தால், கூகுள் தோராயமாக 10₹ முதல் நமக்குத் தருகிறது. எனக்கு மூன்று கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு 30.77 ₹ கொடுத்துள்ளது.
கூகுள் ஏன் நமக்குப் பணம் தர வேண்டும்?
ஆதாயம் இல்லாமல் எவரும் எவருக்கும் எதையும் இலவசமாகத் தர மாட்டார்கள். கூகுளும் விதிவிலக்கல்ல.
கூகுள் இதற்கென்று ஆட்களை நியமித்துக் கணக்கெடுத்து ஆய்வு நடத்தி செய்வதற்கு ஆகும் செலவு மிக அதிகம் ஆனால், அதே
தன்னுடைய பயனாளர்கள் மூலமாக ஆய்வுகளை நடத்தினால் செலவு குறைவு.
இந்த ஆய்வுகள் மூலம் கிடைக்கும் தகவல்களை வைத்து, தன்னுடைய நிறுவனத்தின் தேவைகளை, மாற்றங்களைச் செயல்படுத்தி மேம்படுத்த நினைக்கிறது.
பணம் கிடைக்கிறது என்றால், யாருமே இதில் கலந்து தங்கள் கருத்தை கூற விரும்புவார்கள். எனவே, குறைவான முதலீட்டில் தான் நினைப்பதை சாதிக்க நினைக்கிறது.
இதனால் நமக்குப் பயனுள்ளதா?
கூகுள் கணக்கெடுப்பில் கலந்து கொள்வதால், நமக்கு ஒன்றும் இழப்பு இல்லை. இதைச் செய்ய நமக்கு 2 நிமிடங்களுக்கு மேல் ஆகாது. அதோடு அடிக்கடி நம்மைத் தொல்லைப்படுத்தாது.
விருப்பப்பட்டால் இதில் கலந்து கொள்ளலாம், இல்லையென்றால் புறக்கணிக்கலாம். கட்டாயம் எதுவும் கிடையாது. எனவே, இதனால் பயன் மட்டுமே! இழப்பு ஏற்படாது.
இதைப்பயன்படுத்த நீங்கள் “Google Opinion Rewards” செயலியை நிறுவி இருக்க வேண்டும்.
அமெரிக்காவில் மட்டும் இருந்த இந்தச் சேவை தற்போது சிங்கப்பூர், இந்தியா போன்ற ஆசிய நாடுகளுக்கும் விரிவடைந்துள்ளது.

Comments

Popular posts from this blog

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க...

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க... யாருக்கு தான் இந்த ஆசை இருக்காது. நாமும் நல்ல வசதியோடு எந்த கஷ்டமும் இல்லாம, அள்ள அள்ள பணம் குறையாம இருக்கணும்னு. ஆனால் நம்மில் பெரும்பாலானோர் அப்படி ஆசைப்படுவதோடு நிறுத்தி விடுகிறோம். அதற்கான முயற்சிகளை எடுப்பதே இல்லை. தொழில் விருத்தி சிலருக்கு வாழ்க்கையில் நல்ல தொழில் இருக்கும். அதை விருத்தி செய்ய எல்லா விதமான முயற்சிகளையும் செய்து கொண்டே இருப்பார்கள். ஆனாலும் அதிர்ஷ்டம் என்பது கடவுள் நம்பிக்கை என்பதுவும் கூட முக்கியமல்லவா?... அதனாலேயே சிலருடைய அவ நம்பிக்கையால் தான் என்ன முயற்சி செய்தாலும் அது வெற்றியடையாமலோ அல்லது கால தாமதமோ ஆகிவிடுகிறது தன லாபம் உங்களுடைய வீட்டில் எப்போதும் தன ஆகர்ஷணம் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டுமென்றால்அதற்கு சின்ன சின்ன பரிகாரங்கள் உள்ளன. அதை முழு மனதோடு நம்பி செய்தாலே போதும் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாமல் இருந்து கொண்டே இருக்கும். அப்படி என்ன பரிகாரங்கள் என்ன வேண்டும் என்று பார்ப்போம். பரிகாரம்  சின்ன சின்ன தெய்வா...

தஞ்சாவூர்-கும்பகோணம் பைபாஸ் ரைடர்ஸ் பஸ் இயக்கம்

இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே  தேசிய நெடுஞ்சாலை வழியாக புதிய நேரடி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பயண நேரம் வெகுவாக குறைந்துள்ளது. இதை மக்கள் மற்றும் பயணிகள் வரவேற்றுள்ளனர்.  தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும். இதனால் இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. இந்த பேருந்து சேவை ஒரு நாளைக்கு 18 முறை இயக்கப்படுகிறது. கும்பகோணத்தில் இருந்து காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பேருந்து புறப்படும். தஞ்சாவூரில் இருந்து காலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை பேருந்து இயக்கப்படும். இந்த புதிய பேருந்துகள் "பைபாஸ் ரைடர்ஸ்" சேவையின் ஒரு பகுதியாக இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் NH 36-ல் தஞ்சாவூர் - சோழபுரம் இடையே இயக்கப்படுகின்றன. 50 கி.மீ தூரத்தை இப...

மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்!

  மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்! மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் செம்மங்குளம் அருகே தனியார் பள்ளியில் சிறுத்தை முகாமிட்டிருப்பதால் அப்பள்ளிக்கு இன்று விடுமுறையை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் அருகே பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் திடீரென சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. தற்போது சிறுத்தையின் நடமாட்டத்தை சிசிடிவி கேமரா மூலம் வனத்துறையினரும் கல்வித் துறை அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் அங்கும் இங்குமாக சிறுத்தை நடமாடிக் கொண்டே இருக்கிறது.