Skip to main content

Posts

சீரியலில் நடிக்கிறார் பாக்யராஜ்! ஜோடியாக நடிக்க மறுத்த ஹீரோயின்!

ஒருகாலத்தில் அடுக்கடுக்காக வெற்றிகளை மட்டுமே கொடுத்த கே.பாக்யராஜ், இன்றளவும் ‘திரைக்கதை மன்னன்’ என்றே பாராட்டப்படுகிறார். காலம் நல்ல நல்ல மாங்கனிகளை கூட, பஞ்சாமிர்தம் ஆக்கிவிடுவதுதான் கொடுமை. சினிமாவில் அவரது திரைக்கதைக்கு இப்போது மவுசு இல்லை. அவரது மகனுக்கும் நல்ல படங்களை தேர்வு செய்து நடிக்கும் பக்குவம் இல்லை. இருந்தாலும் பழகிய சினிமாவை விட்டுவிட்டு, பட்டுத்துணி விற்கவா போக முடியும்? பெரிய திரையை விட்டுவிட்டு சின்னத்திரைக்குள் என்ட்ரி ஆகிறார் பாக்யராஜ். அவ்வப்போது சின்னத்திரை ஜட்ஜ் ஆக முகம் காட்டியவர், இப்போது சீரியல் ஒன்றில் நடிக்கப் போகிறார். எருது இளைச்சுதுன்னா, குருவி பொண்ணு கேட்குமாம்… அப்படிதான் இவரை சீரியலில் கமிட் பண்ணியவர்கள், உங்கள் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்ணு அனுப்பி வைங்க என்றார்களாம். வேறு வழியில்லை. அனுப்பி வைத்திருக்கிறார் கே.பாக்யராஜ். அதேபோல இந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடிக்க சம்மதித்த ஊர்வசியிடமும், உங்க லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வேணும். ஏன்னா நீங்க இப்ப எப்படி இருக்கீங்கன்னு நாங்க தெரிஞ்சுக்கணும் என்று கேட்கப்பட்டதாம். நான் எப்படியிர...

மானை சுற்றி நாலு பெண்கள் கலங்கிய காமெடி சூரி

கும்கி யானை போலிருந்த இசையமைப்பாளர் இமான், குழாப்புட்டு கிண்ணம் போல சின்னதாகிவிட்டார். பட்டினி கிடந்து இளைத்தாரா? படுத்து உருண்டு இளைத்தாரா? என்கிற ரகசியத்தையெல்லாம் வெளியிட அவர் தயாராக இல்லை. ஆனால் ஊரெல்லாம் பேசப்படும் ஒரு விஷயத்திற்கு சரியான பதிலடி கொடுத்தார். அப்படியென்ன பேசியது ஊர்? “இமான் இளைச்சுட்டு வர்றதுக்கு காரணமே அவர் ஜி.வி.பிரகாஷ் மாதிரி நடிக்கப் போறதுதான்…” என்று. அம்மாகிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கும் ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ பட விழா இன்விடேஷனில் இமானும் அவருடன் நாலைந்து இளம் பெண்களும் இருப்பதை போல ஒரு போட்டோவை போட்டுவிட்டார்கள். அவ்வளவுதான்… அவர் நடிக்கப் போறது கன்பார்ம் என்று விவாதத்திற்கு முற்றுப்புள்ளியே வைத்துவிட்டார்கள். ஊர் வாயை மூடுவதற்குள் ஒரு பாட்டுக்கு ட்யூன் போட்டுவிடலாம்தான். இருந்தாலும் வேலை மெனக்கெட்டு அதற்கு விளக்கம் சொன்னார் டி.இமான். “நான் நடிக்கப் போறதில்ல. ஒரு போதும் அப்படி செய்ய மாட்டேன்.” இதன் காரணமாக பலரும் நிம்மதி பெருமூச்சு விட, விழா நடந்த கலைவாணர் அரங்கமே அந்த நிம்மதி மூச்சுக்காற்றால் சூடானது வேறு விஷயம். அதற்கப்புறம் மைக்கை...

ஹாலிவுட்டிற்கு செல்லும் 2.0 படம்- என்ன ஒரு பிரம்மாண்ட பிளான்

ரஜினியின் 2.0 பட எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் எப்படி இருக்கிறது என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ரஜினி, ஷங்கர்,  அக்ஷய் முதல் தயாரிப்பு குழு வரை அனைத்துமே படத்திற்கு பிரம்மாண்டம் தான். தற்போது இந்த படத்துக்காக 8 மாதங்களுக்கு முன்பே 100 அடி உயர வெப்பக்காற்று பலூனுக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறார்களாம். வரும் செவ்வாய் கிழமை லாஸ் ஏஞ்சல்ஸில் ஹாலிவுட் விளம்பரத்தில் இந்த பலூனை பறக்கவிடப் போகிறார்களாம். மேலும் லண்டன், துபாய், சான்பிரான்சிஸ்கோ, ஆஸ்திரேலியா, ஐரோப்பா போன்ற நாடுகளிலும் இந்த பலுனை பறக்கவிடப் போகிறார்களாம். இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் இந்த வெப்பக்காற்று பலுனை கொண்டு வர திட்டமிட்டுள்ளார்களாம். அதோடு பல பிரபலங்கள் இந்த பலூனில் சவாரி செய்யப்போவதாக கூறப்படுகிறது.

நடிகை என்றாலே இப்படித்தான் தோன்றுமோ :)

              ''அழகாத்தானே இருக்கு இந்த படம் ?எதுக்கு பிரசுரித்த பத்திரிக்கை மேல் அந்த நடிகை வழக்கு போட்டாராம் ?''                ''கணவர்கள் மற்றும் குழந்தையுடன் ரம்பான்னு  தலைப்பு போட்டால் கோபம் வரத்தானே செய்யும் ?''          (கனவு நாயகியை நீண்ட நாள் கழித்து பார்த்ததால் உண்டான மொக்கை இது ,உண்மையில்லை :) சொன்னால் மட்டும் போதுமா :)                       ''நீங்களே டாக்டர் ,காய்ச்சல் வந்தா எதுக்கு அடுத்த  டாக்டரிடம் போறீங்க ?''              ''செல்ப் மெடிஸின் சாப்பிடுறது தப்பாச்சே !'' முறைப் பொண்ணோட லட்சணம்  அப்படி :)         ''ஓடிப் போற நம்ம பின்னாலே யாரோ தொடர்ந்து வர்ற மாதிரி இருக்கே !''        '' முறைப் பையன்தான் ,நீங்க என் கழுத்துலே  மூணு முடிச்சு போடாம  ஓடிடக் கூடாதுன்னு பின்னாடியே வர்றார்  !'' பயணிகளுக்கு இது வசதித...