Skip to main content

சீன வாஸ்து சாஸ்திரப்படி இந்த பொருட்கள் வீட்டில் இருந்தால் செல்வம் பெருகுமாம்... ட்ரை பண்ணி பாருங்க

எப்படி இந்திய வாஸ்து சாஸ்திரப் படி, வீட்டில் இருக்கும் பொருட்கள் அந்த வீட்டில் உள்ளோரின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமோ, ஃபெங் சூயி படி வைக்கும் பொருட்களும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது.

ஃபெங் சூயி என்பது ஒரு பழங்கால சீனக் கலையாகும். இது கட்டிடங்கள், பொருள்கள் மற்றும் இடத்தை ஒரு சூழலில் நல்லிணக்கத்தையும் சமநிலையையும் அடையச் செய்கிறது. சுருக்கமாக கூற வேண்டுமானால், சீனாவின் வாஸ்து சாஸ்திர முறை தான் ஃபெங் சூயி. இந்த ஃபெங் சூயி மூலம் ஒருவரின் வாழ்வில் பலவிதமான நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.




எப்படி இந்திய வாஸ்து சாஸ்திரப் படி, வீட்டில் இருக்கும் பொருட்கள் அந்த வீட்டில் உள்ளோரின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமோ, அதேப் போல் ஃபெங் சூயி படி வைக்கும் பொருட்களும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. முக்கியமாக வாஸ்து தோஷத்தில் இருந்து விடுபட ஃபெங் சூயி உதவும். இப்போது ஃபெங் சூயி படி எந்த பொருட்களை வீட்டில் வைத்திருந்தால், செல்வம் பெருகுவதோடு, தொழிலில் முன்னேற்றமும் வெற்றியும் கிடைக்கும் என்பதைக் காண்போம். 

  சிரிக்கும் புத்தர் ஃபெங் சூயி முறையில், சிரிக்கும் புத்தர் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதனால் சிரிக்கும் புத்தரை வீட்டின் ஹால், படிக்கும் அறை, அலுவலகம் என அனைத்து இடங்களிலும் வைப்பது நல்லது. இப்படி வைப்பதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் நிலவும் என்பது நம்பிக்கை.



உலோக ஆமை

ஃபெங் சூயி படி, உலோக ஆமையை வீட்டில் வைத்திருப்பது நல்லதாக கருதப்படுகிறது. அதுவும் வீட்டில் ஆமையை வைத்திருந்தால் நோய்களில் இருந்து விடுபடலாம். அதே வேளையில் ரகசிய எதிரிகளை வெல்லும் ஆற்றலும் கிடைக்கும். வீட்டில் செல்வம் பெருக வேண்டுமானால், உலோக ஆமையை வடக்கு திசையில் தண்ணீர் நிரப்பப்பட்ட ஜாடியில் வையுங்கள். ஏனென்றால் வடக்கு பகுதி குபேரனின் இருப்பிடமாகும்.



சீன நாணயங்கள்

 ஃபெங் சூயியில் சீன நாணயங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதுவும் இந்த நாணயங்களை பணம் வைக்கும் இடத்தில் வைத்திருக்க வேண்டும். இப்படி வைப்பதன் மூலம் வீட்டின் வருமானம் அதிகரித்து, செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது. அதோடு இந்த நாணயங்கள் வீட்டின் தேவையற்ற செலவுகளைக் குறைப்பதாகவும் நம்பப்படுகிறது.





உலோக பிரமீடு ஃபெங் சூயி படி, வீட்டின் வடக்கு திசையில் உலோக பிரமீட்டை வைப்பது நல்லதாக கருதப்படுகிறது. ஒருவரது வீட்டில் இந்த உலோக பிரமீடு இருந்தால், அது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை அழித்து, வீட்டின் நிதி நிலையை மேம்படுத்துவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த பிரமீடை வைப்பதற்கு முன் இதை கங்கை நீரால் சுத்திகரிக்க வேண்டும்.



Comments

Popular posts from this blog

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க...

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க... யாருக்கு தான் இந்த ஆசை இருக்காது. நாமும் நல்ல வசதியோடு எந்த கஷ்டமும் இல்லாம, அள்ள அள்ள பணம் குறையாம இருக்கணும்னு. ஆனால் நம்மில் பெரும்பாலானோர் அப்படி ஆசைப்படுவதோடு நிறுத்தி விடுகிறோம். அதற்கான முயற்சிகளை எடுப்பதே இல்லை. தொழில் விருத்தி சிலருக்கு வாழ்க்கையில் நல்ல தொழில் இருக்கும். அதை விருத்தி செய்ய எல்லா விதமான முயற்சிகளையும் செய்து கொண்டே இருப்பார்கள். ஆனாலும் அதிர்ஷ்டம் என்பது கடவுள் நம்பிக்கை என்பதுவும் கூட முக்கியமல்லவா?... அதனாலேயே சிலருடைய அவ நம்பிக்கையால் தான் என்ன முயற்சி செய்தாலும் அது வெற்றியடையாமலோ அல்லது கால தாமதமோ ஆகிவிடுகிறது தன லாபம் உங்களுடைய வீட்டில் எப்போதும் தன ஆகர்ஷணம் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டுமென்றால்அதற்கு சின்ன சின்ன பரிகாரங்கள் உள்ளன. அதை முழு மனதோடு நம்பி செய்தாலே போதும் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாமல் இருந்து கொண்டே இருக்கும். அப்படி என்ன பரிகாரங்கள் என்ன வேண்டும் என்று பார்ப்போம். பரிகாரம்  சின்ன சின்ன தெய்வா...

தஞ்சாவூர்-கும்பகோணம் பைபாஸ் ரைடர்ஸ் பஸ் இயக்கம்

இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே  தேசிய நெடுஞ்சாலை வழியாக புதிய நேரடி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பயண நேரம் வெகுவாக குறைந்துள்ளது. இதை மக்கள் மற்றும் பயணிகள் வரவேற்றுள்ளனர்.  தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும். இதனால் இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. இந்த பேருந்து சேவை ஒரு நாளைக்கு 18 முறை இயக்கப்படுகிறது. கும்பகோணத்தில் இருந்து காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பேருந்து புறப்படும். தஞ்சாவூரில் இருந்து காலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை பேருந்து இயக்கப்படும். இந்த புதிய பேருந்துகள் "பைபாஸ் ரைடர்ஸ்" சேவையின் ஒரு பகுதியாக இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் NH 36-ல் தஞ்சாவூர் - சோழபுரம் இடையே இயக்கப்படுகின்றன. 50 கி.மீ தூரத்தை இப...

மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்!

  மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்! மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் செம்மங்குளம் அருகே தனியார் பள்ளியில் சிறுத்தை முகாமிட்டிருப்பதால் அப்பள்ளிக்கு இன்று விடுமுறையை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் அருகே பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் திடீரென சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. தற்போது சிறுத்தையின் நடமாட்டத்தை சிசிடிவி கேமரா மூலம் வனத்துறையினரும் கல்வித் துறை அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் அங்கும் இங்குமாக சிறுத்தை நடமாடிக் கொண்டே இருக்கிறது.