Skip to main content

Sri Manmatheeswarar Temple – Kuthalam ஸ்ரீ மன்மதீஸ்வரர் கோயில் – குத்தாலம்

 இறைவன் : மன்மதீஸ்வரர் 

இறைவி : ஆதி சக்தி 

ஊர் : குத்தாலம் 

மாவட்டம் : மயிலாடுதுறை , தமிழ்நாடு 

Sri Manmatheeswarar Temple – Kuthalam ஸ்ரீ மன்மதீஸ்வரர் கோயில் – குத்தாலம் 







கோயில் அமைப்பு : 

கும்பகோணம் மாயவரம் சாலையில் உள்ள குத்தாலம் பேருந்து நிலையத்தின் அருகில் இக்கோயில் அமைந்துள்ளது . கோயில் நுழைவு வாயிலில் மன்மதன் மற்றும் ரதிதேவி இறைவனை பூஜை செய்வது போல் சுதை சிற்பத்தை வடித்துள்ளார்கள் . அதை கடந்து நாம் உள்ளே சென்றால் கோயிலின் மற்றொரு நுழைவு வாயில் ராஜ கோபுரம் இல்லாமல் உள்ளது , அதில் இறைவன் குடும்ப சகிதமாக இருக்கும் சுதை சிற்பம் உள்ளது . அதை கடந்து நாம் உள்ளே சென்றால் கொடிக்கம்பம் மற்றும் பலி பீடத்தை நாம் தரிசிக்கலாம் , பின்பு உள்ளே சென்றால் இறைவன் மன்மதேஸ்வரரை தரிசனம் செய்யலாம் . 

இறைவன் சற்று பெரிய பானத்தில் நமக்கு காட்சி தருகிறார் . இவரை வணங்கினால் பிரித்த தம்பதியர்கள் ஒன்று சேர்வார்கள் மற்றும் தம்பதியர்களுக்குள் ஒற்றுமை பிறக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. அவருக்கு இடது புறத்தில் தாயார் சன்னதி உள்ளது . 

தல வரலாறு :

பார்வதிக்கும் பரமேஸ்வரனுக்கு ஊடல் ஏற்பட்டு பரமேஸ்வரன் தியானத்தில் அமர்ந்தார். தியானத்தில் அமர்ந்ததால் உலகில் பிறப்பு   , இறப்பு பாதிக்கப்பட்டது . பூமாதேவி பாரம் தாங்காமல் தேவேந்திரனிடம் முறையிட தேவர்கள் பிரம்ம தேவனிடம் முறையிட்டனர் , பிரமதேவர் சிவபெருமானும் பார்வதியும் ஒன்று சேர்ந்ததால்தான் இது நடக்கும் என்று கூற அதற்கு என்ன வழி என்று கேக்க பிரம்மதேவன் மன்மதனை பார்த்து  சிவபெருமான் மீது புஷ்ப பாணத்தை தொடுத்தால் சிவபெருமான் தியானத்தில் இருந்து விழிக்க முடியும் என்று கூறினார் . 

மன்மதனும் சிவபெருமான் மீது புஷ்ப பாணத்தை முதுகு புறத்தில் தொடுத்தார் , சிவபெருமான் திரும்பி பாக்க மன்மதன் சாம்பலாகி போனான் .செய்தியை அறிந்து ரதிதேவி சிவபெருமானிடம் முறையிட அவர் பூலோகத்தில் லிகு ஜாரண்யம் என்று சொல்லக்கூடிய பெண்ணும் தவம் செய்து மன்மதனை அடைவாய் என்று சொல்ல , ரதிதேவியும் அவ்வாறு தவம் செய்ய இறைவன் மனம் இறங்கி ரதிதேவியிடம் பங்குனி மாதம் பௌர்ணமி அன்று குத்தாலத்தில் மன்மதன் உயிர்த்தெழுவார் என்று கூறினார் . அதுபோல் மன்மதன் உயிர்பித்து எழுந்து இத்தலத்தில் சிவாலயம் அமைத்து சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டதால் இறைவனுக்கு மன்மதேஸ்வரர் என்றும் இத்தலத்திற்கு மன்மதீஸ்வரம் என்று பெயரும் ஏற்பட்டது 

பரிகாரம் : 

இத்தல இறைவனை பௌர்ணமி நாளில் நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை அபிஷேகம் செய்தால் ஒன்று சேர்வார்கள் என்று நம்பிக்கை உள்ளது . 

திறந்திருக்கும் நேரம் : 

காலை 6 . 30  மணி முதல் , மதியம் 12 மணி வரை , மாலை 5. ௦௦  மணி முதல் இரவு 8 .00 மணி வரை . 


செல்லும் வழி : 

 கும்பகோணம் மாயவரம் சாலையில் உள்ள குத்தாலம் பேருந்து நிலையத்தின் அருகில் இக்கோயில் அமைந்துள்ளது . கும்பகோணத்தில் இருந்தும் மாயவரத்தில் இருந்தும் நிறைய பேருந்துகள் உள்ளன   

அருகில் உள்ள தலங்கள் :

1 . உத்தவேதீஸ்வரர் கோயில் – குத்தாலம் ( தேவார சிவா தலம்)

2 .மேலைத்திருமணஞ்சேரி – ஐராவதேஸ்வரர் கோயில் (பாடல் பெற்ற தலம் )

3 . திருமணஞ்சேரி – நாதஸ்வாமி கோயில் ( பாடல் பெற்ற தலம் )

4. ஸ்ரீ கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில் – திருவேள்விக்குடி

location:

Comments

Popular posts from this blog

The Final Countdown (1980) Tamil Dubbed Movie Download

Movie Info Movie Name :  The Final Countdown (1980) Starring :  Kirk Douglas, Martin Sheen, Katharine Ross, James Farentino Directed by :  Don Taylor Genres :  Action/Adventure Rating :  6.7/10 Source :  BD Rip Language :  Tamil Year :  1980 Description :  A time warp takes the aircraft carrier USS Nimitz and its captain (Kirk Douglas) back to Pearl Harbor, Dec. 6, 1941 Subtitle   The Final Countdown (1980) (Sub Title) The Final Countdown (1980) The Final Countdown HD Sample.mp4 Size : 3.27MB       Download Now... The Final Countdown HD.mp4 Size : 341.66MB       Download Now...

ஆன்லைன் ஷாப்பிங்கில் பொருட்களை சரியான விலைகொடுத்து வாங்குவது எப்படி - Buyhatke

  இன்றைய காலகட்டத்தில் நாம் எந்த பொருட்களை வாங்க நினைத்தாலும் நாம் முதலில் செல்வது ஆன்லைன் வர்த்தக தளங்களுக்குதான் அதிலும் மிக முக்கியமாக எலெக்ட்ரானிக் பொடுட்களான மொபைல், கணினி போன்ற பொருட்கள் அதிகமாக வாங்கப்படுகிறது இதற்கு மிக முக்கியமான காரணம் நாம் வாங்கும் பொருட்கள் சரியில்லை என்றாலோ, திருப்தி அளிக்கவில்லை என்றாலோ அதனை திருப்பி கொடுத்துவிட்டு வேறு மாற்று பொருளையோ  அல்லது பணத்தினையோ திரும்ப பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு நாம் வாங்கும் பொருட்களை நாம் சரியான விலை கொடுத்துதான் வாங்குகின்றோமா என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்வேன். ஏனென்றால் நாம் ஆன்லைன் மூலமாக வாங்கும் எந்த பொருளுமே ஒரே விலையில் இருப்பதில்லை என்பதுதான் உண்மை. நாளுக்குநாள் பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டு கொண்டே தான் இருக்கும். மேலும் தள்ளுபடி என்று சொல்லி விற்க்கப்படும் பொருட்களுமே அதிக இலாபத்தில் விற்கப்படும். இதுபோன்ற பிரச்சினையில் இருந்து விடுபட  Buyhatke  என்னும் மென்பொருள் பன்படுகிறது. இந்த மென்பொருள் கூகுள் குரோம் நீட்சியாகவும், Windows, Android, IOS போன்ற மொபைல் செயலிகளாகவும் கிடைக்கிறது

ரயில் பயணிகள் கவனத்திற்கு! ஜனவரி 1 முதல் திருச்செந்தூர் ரயில்கள் பகுதியாக ரத்து!

  ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்செந்தூர் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இங்கு காணலாம்.   ரயில் பாதை பராமரிப்பு பணிகள்: ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை- திருச்செந்தூர் மற்றும் திருச்செந்தூர் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருநெல்வேலி - திருச்செந்தூர் பிரிவில் செய்துங்கநல்லூர் - ஸ்ரீவைகுண்டம் ரயில் பாதையில் ஜனவரி 1 முதல் ஜனவரி 5 வரை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. திருச்செந்தூர் ரயில்கள் பகுதியாக ரத்து: இதன் காரணமாக பாலக்காடு - திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில் (1 6731/16732) மற்றும் சென்னை - திருச்செந்தூர்- சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் (20605/20606) ஆகியவை ஜனவரி 1 முதல் ஜனவரி 5 வரை திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. திருச்செந்தூரிலிருந்து காலை 12.05 மணிக்கு புறப்படும் திருச்செந்தூர் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில், அடுத்த நாள் காலை 10:15 மணிக்கு பாலக்காடு சென்றடையும். இந்த ரயில் 2