Skip to main content

Sri Manmatheeswarar Temple – Kuthalam ஸ்ரீ மன்மதீஸ்வரர் கோயில் – குத்தாலம்

 இறைவன் : மன்மதீஸ்வரர் 

இறைவி : ஆதி சக்தி 

ஊர் : குத்தாலம் 

மாவட்டம் : மயிலாடுதுறை , தமிழ்நாடு 

Sri Manmatheeswarar Temple – Kuthalam ஸ்ரீ மன்மதீஸ்வரர் கோயில் – குத்தாலம் 







கோயில் அமைப்பு : 

கும்பகோணம் மாயவரம் சாலையில் உள்ள குத்தாலம் பேருந்து நிலையத்தின் அருகில் இக்கோயில் அமைந்துள்ளது . கோயில் நுழைவு வாயிலில் மன்மதன் மற்றும் ரதிதேவி இறைவனை பூஜை செய்வது போல் சுதை சிற்பத்தை வடித்துள்ளார்கள் . அதை கடந்து நாம் உள்ளே சென்றால் கோயிலின் மற்றொரு நுழைவு வாயில் ராஜ கோபுரம் இல்லாமல் உள்ளது , அதில் இறைவன் குடும்ப சகிதமாக இருக்கும் சுதை சிற்பம் உள்ளது . அதை கடந்து நாம் உள்ளே சென்றால் கொடிக்கம்பம் மற்றும் பலி பீடத்தை நாம் தரிசிக்கலாம் , பின்பு உள்ளே சென்றால் இறைவன் மன்மதேஸ்வரரை தரிசனம் செய்யலாம் . 

இறைவன் சற்று பெரிய பானத்தில் நமக்கு காட்சி தருகிறார் . இவரை வணங்கினால் பிரித்த தம்பதியர்கள் ஒன்று சேர்வார்கள் மற்றும் தம்பதியர்களுக்குள் ஒற்றுமை பிறக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. அவருக்கு இடது புறத்தில் தாயார் சன்னதி உள்ளது . 

தல வரலாறு :

பார்வதிக்கும் பரமேஸ்வரனுக்கு ஊடல் ஏற்பட்டு பரமேஸ்வரன் தியானத்தில் அமர்ந்தார். தியானத்தில் அமர்ந்ததால் உலகில் பிறப்பு   , இறப்பு பாதிக்கப்பட்டது . பூமாதேவி பாரம் தாங்காமல் தேவேந்திரனிடம் முறையிட தேவர்கள் பிரம்ம தேவனிடம் முறையிட்டனர் , பிரமதேவர் சிவபெருமானும் பார்வதியும் ஒன்று சேர்ந்ததால்தான் இது நடக்கும் என்று கூற அதற்கு என்ன வழி என்று கேக்க பிரம்மதேவன் மன்மதனை பார்த்து  சிவபெருமான் மீது புஷ்ப பாணத்தை தொடுத்தால் சிவபெருமான் தியானத்தில் இருந்து விழிக்க முடியும் என்று கூறினார் . 

மன்மதனும் சிவபெருமான் மீது புஷ்ப பாணத்தை முதுகு புறத்தில் தொடுத்தார் , சிவபெருமான் திரும்பி பாக்க மன்மதன் சாம்பலாகி போனான் .செய்தியை அறிந்து ரதிதேவி சிவபெருமானிடம் முறையிட அவர் பூலோகத்தில் லிகு ஜாரண்யம் என்று சொல்லக்கூடிய பெண்ணும் தவம் செய்து மன்மதனை அடைவாய் என்று சொல்ல , ரதிதேவியும் அவ்வாறு தவம் செய்ய இறைவன் மனம் இறங்கி ரதிதேவியிடம் பங்குனி மாதம் பௌர்ணமி அன்று குத்தாலத்தில் மன்மதன் உயிர்த்தெழுவார் என்று கூறினார் . அதுபோல் மன்மதன் உயிர்பித்து எழுந்து இத்தலத்தில் சிவாலயம் அமைத்து சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டதால் இறைவனுக்கு மன்மதேஸ்வரர் என்றும் இத்தலத்திற்கு மன்மதீஸ்வரம் என்று பெயரும் ஏற்பட்டது 

பரிகாரம் : 

இத்தல இறைவனை பௌர்ணமி நாளில் நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை அபிஷேகம் செய்தால் ஒன்று சேர்வார்கள் என்று நம்பிக்கை உள்ளது . 

திறந்திருக்கும் நேரம் : 

காலை 6 . 30  மணி முதல் , மதியம் 12 மணி வரை , மாலை 5. ௦௦  மணி முதல் இரவு 8 .00 மணி வரை . 


செல்லும் வழி : 

 கும்பகோணம் மாயவரம் சாலையில் உள்ள குத்தாலம் பேருந்து நிலையத்தின் அருகில் இக்கோயில் அமைந்துள்ளது . கும்பகோணத்தில் இருந்தும் மாயவரத்தில் இருந்தும் நிறைய பேருந்துகள் உள்ளன   

அருகில் உள்ள தலங்கள் :

1 . உத்தவேதீஸ்வரர் கோயில் – குத்தாலம் ( தேவார சிவா தலம்)

2 .மேலைத்திருமணஞ்சேரி – ஐராவதேஸ்வரர் கோயில் (பாடல் பெற்ற தலம் )

3 . திருமணஞ்சேரி – நாதஸ்வாமி கோயில் ( பாடல் பெற்ற தலம் )

4. ஸ்ரீ கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில் – திருவேள்விக்குடி

location:

Comments

Popular posts from this blog

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க...

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க... யாருக்கு தான் இந்த ஆசை இருக்காது. நாமும் நல்ல வசதியோடு எந்த கஷ்டமும் இல்லாம, அள்ள அள்ள பணம் குறையாம இருக்கணும்னு. ஆனால் நம்மில் பெரும்பாலானோர் அப்படி ஆசைப்படுவதோடு நிறுத்தி விடுகிறோம். அதற்கான முயற்சிகளை எடுப்பதே இல்லை. தொழில் விருத்தி சிலருக்கு வாழ்க்கையில் நல்ல தொழில் இருக்கும். அதை விருத்தி செய்ய எல்லா விதமான முயற்சிகளையும் செய்து கொண்டே இருப்பார்கள். ஆனாலும் அதிர்ஷ்டம் என்பது கடவுள் நம்பிக்கை என்பதுவும் கூட முக்கியமல்லவா?... அதனாலேயே சிலருடைய அவ நம்பிக்கையால் தான் என்ன முயற்சி செய்தாலும் அது வெற்றியடையாமலோ அல்லது கால தாமதமோ ஆகிவிடுகிறது தன லாபம் உங்களுடைய வீட்டில் எப்போதும் தன ஆகர்ஷணம் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டுமென்றால்அதற்கு சின்ன சின்ன பரிகாரங்கள் உள்ளன. அதை முழு மனதோடு நம்பி செய்தாலே போதும் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாமல் இருந்து கொண்டே இருக்கும். அப்படி என்ன பரிகாரங்கள் என்ன வேண்டும் என்று பார்ப்போம். பரிகாரம்  சின்ன சின்ன தெய்வா...

தஞ்சாவூர்-கும்பகோணம் பைபாஸ் ரைடர்ஸ் பஸ் இயக்கம்

இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே  தேசிய நெடுஞ்சாலை வழியாக புதிய நேரடி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பயண நேரம் வெகுவாக குறைந்துள்ளது. இதை மக்கள் மற்றும் பயணிகள் வரவேற்றுள்ளனர்.  தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும். இதனால் இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. இந்த பேருந்து சேவை ஒரு நாளைக்கு 18 முறை இயக்கப்படுகிறது. கும்பகோணத்தில் இருந்து காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பேருந்து புறப்படும். தஞ்சாவூரில் இருந்து காலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை பேருந்து இயக்கப்படும். இந்த புதிய பேருந்துகள் "பைபாஸ் ரைடர்ஸ்" சேவையின் ஒரு பகுதியாக இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் NH 36-ல் தஞ்சாவூர் - சோழபுரம் இடையே இயக்கப்படுகின்றன. 50 கி.மீ தூரத்தை இப...

மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்!

  மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்! மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் செம்மங்குளம் அருகே தனியார் பள்ளியில் சிறுத்தை முகாமிட்டிருப்பதால் அப்பள்ளிக்கு இன்று விடுமுறையை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் அருகே பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் திடீரென சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. தற்போது சிறுத்தையின் நடமாட்டத்தை சிசிடிவி கேமரா மூலம் வனத்துறையினரும் கல்வித் துறை அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் அங்கும் இங்குமாக சிறுத்தை நடமாடிக் கொண்டே இருக்கிறது.