Skip to main content

சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. இனி மாத வருமானம் கிடைக்கும்!


சேமிப்புக் கணக்குகளுக்கு மாதம் தோறும் வட்டிச் செலுத்தப்படும்.





என ஐடிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது.


எல்லா வங்கிகளும் வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்குகளுக்கு ஒவ்வொரு காலாண்டும் வட்டியை செலுத்தி வருகின்றன. ஆனால், ரிசர்வ் வங்கி விதிகளின்படி வங்கிகள் ஒவ்வொரு மாதமும் வட்டியை செலுத்த முடியும். இருப்பினும், பெரும்பாலான வங்கிகள் ஒவ்வொரு மாதமும் வட்டியை செலுத்துவதில்லை.


இந்நிலையில், ஐடிஎஃப்சி வங்கி (IDFC First Bank) தனது வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்குகளுக்கு மாதம் தோறும் வட்டி செலுத்துவதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் வட்டி வருமானம் பெற முடியும்; காலாண்டு அல்லது ஆண்டு இறுதிக்கு காத்திருக்க தேவையில்லை.



ஐடிஎஃப்சி வங்கியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்படி, சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் மாதம் தோறும் வட்டி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சேமிப்புக் கணக்குகளுக்கும் இந்த வசதி பொருந்தும்.


தினசரி அடிப்படையில் வட்டி கணக்கிடப்பட்டு ஒட்டுமொத்த வட்டித் தொகை மாதம் தோறும் செலுத்தப்படும். மற்ற சேவைகள் மற்றும் வசதிகளில் எந்த மாற்றமும் இல்லை. வட்டி வருமானத்துக்காக மாதக் கணக்கில் காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.



Comments

Popular posts from this blog

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க...

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க... யாருக்கு தான் இந்த ஆசை இருக்காது. நாமும் நல்ல வசதியோடு எந்த கஷ்டமும் இல்லாம, அள்ள அள்ள பணம் குறையாம இருக்கணும்னு. ஆனால் நம்மில் பெரும்பாலானோர் அப்படி ஆசைப்படுவதோடு நிறுத்தி விடுகிறோம். அதற்கான முயற்சிகளை எடுப்பதே இல்லை. தொழில் விருத்தி சிலருக்கு வாழ்க்கையில் நல்ல தொழில் இருக்கும். அதை விருத்தி செய்ய எல்லா விதமான முயற்சிகளையும் செய்து கொண்டே இருப்பார்கள். ஆனாலும் அதிர்ஷ்டம் என்பது கடவுள் நம்பிக்கை என்பதுவும் கூட முக்கியமல்லவா?... அதனாலேயே சிலருடைய அவ நம்பிக்கையால் தான் என்ன முயற்சி செய்தாலும் அது வெற்றியடையாமலோ அல்லது கால தாமதமோ ஆகிவிடுகிறது தன லாபம் உங்களுடைய வீட்டில் எப்போதும் தன ஆகர்ஷணம் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டுமென்றால்அதற்கு சின்ன சின்ன பரிகாரங்கள் உள்ளன. அதை முழு மனதோடு நம்பி செய்தாலே போதும் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாமல் இருந்து கொண்டே இருக்கும். அப்படி என்ன பரிகாரங்கள் என்ன வேண்டும் என்று பார்ப்போம். பரிகாரம்  சின்ன சின்ன தெய்வா...

தஞ்சாவூர்-கும்பகோணம் பைபாஸ் ரைடர்ஸ் பஸ் இயக்கம்

இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே  தேசிய நெடுஞ்சாலை வழியாக புதிய நேரடி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பயண நேரம் வெகுவாக குறைந்துள்ளது. இதை மக்கள் மற்றும் பயணிகள் வரவேற்றுள்ளனர்.  தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும். இதனால் இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. இந்த பேருந்து சேவை ஒரு நாளைக்கு 18 முறை இயக்கப்படுகிறது. கும்பகோணத்தில் இருந்து காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பேருந்து புறப்படும். தஞ்சாவூரில் இருந்து காலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை பேருந்து இயக்கப்படும். இந்த புதிய பேருந்துகள் "பைபாஸ் ரைடர்ஸ்" சேவையின் ஒரு பகுதியாக இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் NH 36-ல் தஞ்சாவூர் - சோழபுரம் இடையே இயக்கப்படுகின்றன. 50 கி.மீ தூரத்தை இப...

மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்!

  மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்! மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் செம்மங்குளம் அருகே தனியார் பள்ளியில் சிறுத்தை முகாமிட்டிருப்பதால் அப்பள்ளிக்கு இன்று விடுமுறையை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் அருகே பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் திடீரென சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. தற்போது சிறுத்தையின் நடமாட்டத்தை சிசிடிவி கேமரா மூலம் வனத்துறையினரும் கல்வித் துறை அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் அங்கும் இங்குமாக சிறுத்தை நடமாடிக் கொண்டே இருக்கிறது.