Skip to main content

தமிழக மக்களுக்கு தீபாவளி பரிசு; எவ்வளவு பணம் தரப் போறாங்களாம்?

 

தமிழக மக்களுக்கு தீபாவளி பரிசு; எவ்வளவு பணம் தரப் போறாங்களாம்?


DIWALI BONUS GOVT

உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. பாரபட்சமில்லாமல் பிரபலங்கள் முதல் எளியவர்கள் வரை ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்துள்ளது. நோய்த்தொற்று பரவாமல் இருக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, வேலையிழப்பு ஆகியவை தமிழக அரசை பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடியில் சிக்க வைத்திருக்கிறது. இந்த சூழலில் தான் அடுத்த மாதம் நவம்பர் 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது.


பொங்கல் பரிசு போன்று தீபாவளி பரிசு

கொரோனா முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களின் கைகளில் பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்தால் பொருளாதாரம் மேம்படும் என்று பல்வேறு நிபுணர்களும் கூறி வருகின்றனர். அந்த வகையில் பொங்கல் பரிசு போன்று தீபாவளிக்கும் பரிசு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று தமிழக மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. பொங்கல் பரிசில் இலவச வேட்டி, சேலை, கரும்பு, பொங்கல் தொகுப்பு பொருட்கள், ரூ.1,000 ரொக்கம் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.


தமிழக அரசின் திட்டம் என்ன?


இதேபோல் பண்டிகை கொண்டாட்டத்திற்கு தேவையான பொருட்களும் இருக்குமா? இல்லை ரொக்கம் மட்டும் தீபாவளி பரிசாக கிடைக்குமா? என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த சூழலில் அரிசி ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பத்தாருக்கு தலா ரூ.2,000 வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் அரசு தரப்பில் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

தீபாவளி பரிசு கிடைக்குமா?

அவ்வாறு தமிழக அரசு முடிவெடுக்கும் பட்சத்தில் 1.94 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,030 கோடி அளவிற்கு மாநில அரசுக்கு செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தகவல்கள் தமிழக மக்கள் மத்தியில் அடிக்கடி உலா வந்து, இதுவொரு கோரிக்கையாக எழத் தொடங்கியிருக்கிறது. அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், அறிவிப்புகளை வெளியிட்டு வாக்காளர்களைக் கவரவும் அதிமுக திட்டமிட்டுள்ளது.

அனைவருக்கும் மாதம் ரூ.3,000; தமிழக முதல்வர் சூப்பர் அறிவிப்பு!


சட்டமன்ற தேர்தலுக்கு வியூகம்

அந்த வகையில் தீபாவளி பரிசு தமிழக மக்களுக்கு வரப்பிரசாதமாக மட்டுமல்லாது, எடப்பாடி பழனிசாமி அரசுக்கும் ஆதரவாக மாறக் கூடும். உட்கட்சி பூசலில் இருந்து மெல்ல கரையேறும் வரை அதிமுக, வரும் சட்டமன்ற தேர்தலில் மிகக் கவனமாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அப்படி செயல்பட்டால் எதிர்க்கட்சிகளின் வியூகத்திற்கும் வேட்டு வைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு தமிழக அரசு விரைவில் முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி, படிப்படியாக அவற்றை வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த சூழலில் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தீபாவளி பரிசை அறிவித்து, அதை வழங்குவதற்கான நடவடிக்கையில் தற்போதே இறங்கினால் தான் வரும் தீபாவளிக்கு தமிழக மக்களுக்கு ஓரளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை

diwali bonus,diwali bonus for central government employees 2020,diwali bonus 2020,diwali bonus for postal employees,diwali bonus for government employees,bonus news for central government employees,diwali bonus for railway employees 2020,diwali bonus for central government employee,bonus,diwali bonus for gds,bonus news for central government employees 2020,diwali bonus in railway,diwali bonus for defence personnel 2020,diwali bonus for cg employees,bonus news,diwali bonus railway employees

Comments

Popular posts from this blog

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க...

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க... யாருக்கு தான் இந்த ஆசை இருக்காது. நாமும் நல்ல வசதியோடு எந்த கஷ்டமும் இல்லாம, அள்ள அள்ள பணம் குறையாம இருக்கணும்னு. ஆனால் நம்மில் பெரும்பாலானோர் அப்படி ஆசைப்படுவதோடு நிறுத்தி விடுகிறோம். அதற்கான முயற்சிகளை எடுப்பதே இல்லை. தொழில் விருத்தி சிலருக்கு வாழ்க்கையில் நல்ல தொழில் இருக்கும். அதை விருத்தி செய்ய எல்லா விதமான முயற்சிகளையும் செய்து கொண்டே இருப்பார்கள். ஆனாலும் அதிர்ஷ்டம் என்பது கடவுள் நம்பிக்கை என்பதுவும் கூட முக்கியமல்லவா?... அதனாலேயே சிலருடைய அவ நம்பிக்கையால் தான் என்ன முயற்சி செய்தாலும் அது வெற்றியடையாமலோ அல்லது கால தாமதமோ ஆகிவிடுகிறது தன லாபம் உங்களுடைய வீட்டில் எப்போதும் தன ஆகர்ஷணம் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டுமென்றால்அதற்கு சின்ன சின்ன பரிகாரங்கள் உள்ளன. அதை முழு மனதோடு நம்பி செய்தாலே போதும் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாமல் இருந்து கொண்டே இருக்கும். அப்படி என்ன பரிகாரங்கள் என்ன வேண்டும் என்று பார்ப்போம். பரிகாரம்  சின்ன சின்ன தெய்வா...

தஞ்சாவூர்-கும்பகோணம் பைபாஸ் ரைடர்ஸ் பஸ் இயக்கம்

இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே  தேசிய நெடுஞ்சாலை வழியாக புதிய நேரடி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பயண நேரம் வெகுவாக குறைந்துள்ளது. இதை மக்கள் மற்றும் பயணிகள் வரவேற்றுள்ளனர்.  தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும். இதனால் இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. இந்த பேருந்து சேவை ஒரு நாளைக்கு 18 முறை இயக்கப்படுகிறது. கும்பகோணத்தில் இருந்து காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பேருந்து புறப்படும். தஞ்சாவூரில் இருந்து காலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை பேருந்து இயக்கப்படும். இந்த புதிய பேருந்துகள் "பைபாஸ் ரைடர்ஸ்" சேவையின் ஒரு பகுதியாக இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் NH 36-ல் தஞ்சாவூர் - சோழபுரம் இடையே இயக்கப்படுகின்றன. 50 கி.மீ தூரத்தை இப...

மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்!

  மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்! மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் செம்மங்குளம் அருகே தனியார் பள்ளியில் சிறுத்தை முகாமிட்டிருப்பதால் அப்பள்ளிக்கு இன்று விடுமுறையை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் அருகே பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் திடீரென சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. தற்போது சிறுத்தையின் நடமாட்டத்தை சிசிடிவி கேமரா மூலம் வனத்துறையினரும் கல்வித் துறை அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் அங்கும் இங்குமாக சிறுத்தை நடமாடிக் கொண்டே இருக்கிறது.