Skip to main content

மார்பகப் புற்றுநோய் தாக்காமல் தடுக்க உதவும் ஐந்து சூப்பர் உணவுகள் என்னென்ன?...

BREAST CANCER CURE , BREAST CANCER REMEDY , CURE CANCER EASY 


நாம் அனைவருமே ஒரு விஷயத்தை கண்டிப்பாக கேள்விப்பட்டிருப்போம். அதாவது டயட்டை மேற்கொள்வதன் மூலம் நம்முடைய உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று கேள்விப்பட்டிருப்போம். அது மிக முக்கியமான நோயிலிருந்து பாதுகாக்க கூடியதாகவும் இருக்கிற்து.அது தான் மார்பகப் புற்றுநோய் ஆகும். பெண்களைத் தாக்கும் மார்பகப் புற்றுநோயின் முதல் நிலையை நாம் உணவை பயன்படுத்தியும் உடற்பயிற்சியினை மேற்கொண்டுமே அந்த நோயை விரட்டி விட முடியும். நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் உணவே மருந்து என்னும் பயன்பாடு இதற்கு 100% பொருந்தக் கூடியதாகும். உணவு மட்டுமின்றி உடற்பயிற்சியும் மிக அவசியமான ஒன்றாகும்.

'Chemotherapy'  'Radiotherphy' 'Surgery'

உணவே மருந்து


2017 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்கன் சொசைட்டி ஆப் கிளினிகல் ஆன்கலாஜி என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி உணவும் உடற்பயிற்சியும் சரியாக பெறுபவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஆனது 25 முதல் 35 சதவீதம் வரை தாக்காமல் இருக்கும். இது ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்றே நான் கருதுகிறேன். ஏனெனில் தேவையற்ற் உணவுகள் மற்றும் இயற்கைக்கு மாறாக நமது வாழ்க்கை முறையும் நம்மை பல்வேறு நோய்களுக்கு தள்ளுகிறது என்பதை நாம் அனைவரும் அறிந்தே இருக்கிறோம். இப்பொழுது நாம் டயட்டின் முக்கியத்துவத்தினை பற்றி நன்றாக அறிந்திருக்கிறோம். மார்பக புற்றுநோயில் இருந்து நம்மை பாதுகாக்க கூடிய டயட் உணவுகளை இந்த கட்டுரையில் காணலாம். இனி உங்கள் காலத்தை வீணாக்காமல் இந்த 5 உணவுகளை உங்கள் வழக்கமான உணவு பட்டியலில் இடம் பெற செய்யுங்கள், நோயிலிருந்து குணமாக பாதுகாப்பாக இருங்கள்.

​மஞ்சள்



இந்திய கலாச்சாரத்தில் மஞ்சளுக்கு தனி முக்கியத்துவம் உண்டு. அதன் நோய் எதிர்ப்புத் திறனை அனைவரும் அறிந்தே இருக்கிறோம். ஆனால், அது மார்பக புற்றுநோய்க்கான மிக முக்கியமான எதிர்ப்பு சக்தி கொண்டது என்பதை நாம் இப்போதுதான் கேள்விப்படுகிறோம் அல்லவா! மஞ்சளை நாம் உணவில் கலர் வருவதற்கும் நறுமணம் ஊட்டுவதற்காக மட்டுமே பயன்படுத்துகிறோம்.

மஞ்சளானது நமது உடலுக்கு கட்டுக்கடங்காத அளவுக்கதிகமான நோய் எதிர்ப்புத் திறனை வாரி வழங்குகிறது. இந்திய பெண்கள் பலரும் மஞ்சளை முகம் கை கால்களுக்கு தேய்த்து குளிப்பார்கள். இது அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது என்பதால் தோல் சார்ந்த பிரச்சினைகளில் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது. எனவே, மஞ்சளை உங்களது அன்றாட உணவுப் பழக்கவழக்கங்களில் அதிகமாக பயன்படுத்தப் பாருங்கள்.


ப்ரோக்கோலி



இந்த காய்கறியானது மார்பகப் புற்றுநோயை எதிர்க்கக்கூடிய மருத்துவம் தன்மை கொண்ட உணவு என்று பல அறிஞர்களாலும் ஆய்வுகளும் உறுதி செய்யப்பட்டுள்ளது. டியூமர் போன்ற கடினமான நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாக்க வல்ல சக்தியினை இந்த காய்கறி பெற்றிருக்கிறது.

இதிலிருக்கும் அதிக அளவிலான ஊட்டச்சத்துகள் மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நமக்கு பயன்படக் கூடியவை. நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு இதன் பயன்பாடு முக்கியத்துவமானதாகும். இதில் இருக்கும் வைட்டமின் கே என்ற ஊட்டச்சத்தானது மார்பகத்தில் புற்றுநோய் கட்டியை உருவாக்கக்கூடிய கிருமிகளை அழிக்கவல்லது


ஆப்பிள்



தினமும் ஒரு ஆப்பிளை உண்டு வந்தாலே நாம் மருத்துவர்கள் இருக்கும் இடம் பக்கமே செல்ல வேண்டாம் என்பது நம்முடைய சுற்றுவட்டாரப் பகுதியில் அதிகமாக பயன்படுத்தப்படும் பேச்சாகும். அனைவருமே ஆப்பிளை பார்த்து வியக்க கூடிய விஷயமாக அதில் இருக்கும் அதிகப்படியான ஊட்டச்சத்துக்களை நாம் குறிப்பிடலாம்.

இதில் இருக்கும் பைபர், வைட்டமின், மினரல் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நம் உடலுக்கு தேவையான சக்தியை அளிப்பதுடன் புற்றுநோயில் இருந்து நம்மை பாதுகாப்பதற்கு பயன்படுகிறது. எனவே, பெண்களே உங்கள் வாழ்வில் தினமும் ஒரு ஆப்பிள் பழத்தையாவது சாப்பிடுவதை மறக்காதீர்கள். உங்கள் ஹாண்ட் பேக்கில் இனி ஆப்பிள் பழம் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.



மாதுளை பழம்


நம் உடலில் ரத்தம் என்று நீங்கள் யோசித்தால் உங்கள் ஞாபகத்திற்கு வர வேண்டியது மாதுளை பழம் ஆகும். நம் இரத்ததிற்கென்றே இயற்கை கொடுத்த கொடையாக நாம் மாதுளைப்பழத்தினை பார்க்கலாம். இரத்தத்திற்கு தேவையான சத்துக்களை கொண்டுள்ள மாதுளை பழத்தை நீங்கள் பழக்கடைக்கு செல்லும் பொழுது வாங்குவதை மறந்துவிடாதீர்கள்.

2017 ஆம் ஆண்டு வெளிவந்த ஒக்சிடேவிட் மெடிசன் மற்றும் செல்லுலார் லாங்கிவிட்டி என்ற ஆராய்ச்சியின் அறிக்கையின்படி மாதுளைப்பழம் ஆனது புற்று நோயினை கட்டுப்படுத்தக்கூடிய அதிக அளவிலான சத்துக்களை கொண்டுள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது. உங்கள் தேவைக்கு ஏற்ப மாதுளைப் பழத்தை அப்படியே சாப்பிடலாம் அல்லது உங்கள் மிக்ஸியில் போட்டு ஜூஸ் செய்தும் குடிக்கலாம். ஆனால் அதை உங்கள் உடலில் செலுத்துவதன் மூலம் மார்பக புற்று நோயை ஓட ஓட விரட்டலாம்.


மீன் உணவு



நீங்க மீனை விரும்பி உண்பவராக இருந்தால் இது உங்களுக்கு வாழ்நாள் பரிசு என்று கூறலாம். கணக்கிலடங்காத புரோட்டின் சத்தும் தன்னிடம் கொண்ட மீனானது மார்பக புற்றுநோய்க்கு எதிரான மிக முக்கியமான கவசமாக செயல்படுகிறது. ஒமேகா 3 ஊட்டச்சத்தினை கொண்ட மீன்கள் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை அதிக அளவில் கொடுக்க வல்லது. பின்ன என்ன பெண்களே எதற்காக யோசிக்க வேண்டும்? உடனடியாக ஷாப்பிங் செல்லுங்கள், நிறைய சாப்பிடுங்கள், மார்பக புற்று நோயை விரட்டுங்கள்.


Comments

Popular posts from this blog

ஆன்லைன் ஷாப்பிங்கில் பொருட்களை சரியான விலைகொடுத்து வாங்குவது எப்படி - Buyhatke

  இன்றைய காலகட்டத்தில் நாம் எந்த பொருட்களை வாங்க நினைத்தாலும் நாம் முதலில் செல்வது ஆன்லைன் வர்த்தக தளங்களுக்குதான் அதிலும் மிக முக்கியமாக எலெக்ட்ரானிக் பொடுட்களான மொபைல், கணினி போன்ற பொருட்கள் அதிகமாக வாங்கப்படுகிறது இதற்கு மிக முக்கியமான காரணம் நாம் வாங்கும் பொருட்கள் சரியில்லை என்றாலோ, திருப்தி அளிக்கவில்லை என்றாலோ அதனை திருப்பி கொடுத்துவிட்டு வேறு மாற்று பொருளையோ  அல்லது பணத்தினையோ திரும்ப பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு நாம் வாங்கும் பொருட்களை நாம் சரியான விலை கொடுத்துதான் வாங்குகின்றோமா என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்வேன். ஏனென்றால் நாம் ஆன்லைன் மூலமாக வாங்கும் எந்த பொருளுமே ஒரே விலையில் இருப்பதில்லை என்பதுதான் உண்மை. நாளுக்குநாள் பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டு கொண்டே தான் இருக்கும். மேலும் தள்ளுபடி என்று சொல்லி விற்க்கப்படும் பொருட்களுமே அதிக இலாபத்தில் விற்கப்படும். இதுபோன்ற பிரச்சினையில் இருந்து விடுபட  Buyhatke  என்னும் மென்பொருள் பன்படுகிறது. இந்த மென்பொருள் கூகுள் குரோம் நீட்சியாகவும், Windows, Android, IOS போன்ற மொபைல் செயலிகளாகவும் கிடைக்கிறது

ரயில் பயணிகள் கவனத்திற்கு! ஜனவரி 1 முதல் திருச்செந்தூர் ரயில்கள் பகுதியாக ரத்து!

  ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்செந்தூர் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இங்கு காணலாம்.   ரயில் பாதை பராமரிப்பு பணிகள்: ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை- திருச்செந்தூர் மற்றும் திருச்செந்தூர் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருநெல்வேலி - திருச்செந்தூர் பிரிவில் செய்துங்கநல்லூர் - ஸ்ரீவைகுண்டம் ரயில் பாதையில் ஜனவரி 1 முதல் ஜனவரி 5 வரை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. திருச்செந்தூர் ரயில்கள் பகுதியாக ரத்து: இதன் காரணமாக பாலக்காடு - திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில் (1 6731/16732) மற்றும் சென்னை - திருச்செந்தூர்- சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் (20605/20606) ஆகியவை ஜனவரி 1 முதல் ஜனவரி 5 வரை திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. திருச்செந்தூரிலிருந்து காலை 12.05 மணிக்கு புறப்படும் திருச்செந்தூர் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில், அடுத்த நாள் காலை 10:15 மணிக்கு பாலக்காடு சென்றடையும். இந்த ரயில் 2

உங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை எப்படி இணைப்பது? எளிய வழிமுறைகள் இங்கே!

  How To Link Aadhar Number To Tamilnadu Eb Connection Full Steps Here உங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை எப்படி இணைப்பது? எளிய வழிமுறைகள் இங்கே! தமிழக அரசு மின்சார எண்ணுடன் ஆதாரை இணைக்க பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதற்காக பயனர்கள் எளிதில் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கும் வசதியை ஆன்லைனில் செய்துள்ளது. இதற்கு வசதியாக லிங்க் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், ஒன்றிற்கு மேற்பட்ட கணக்குகளுக்கு மேல் மின் இணைப்பு வைத்திருக்கும் பயனர்கள், ஒரே ஆதார் எண்ணை ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்பு எண்களுடன் இணைப்பதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிற்க்கும் மேற்பட்ட மின் இணைப்பு எண் வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் ஒரே செல்போன் எண்ணை மட்டுமே கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் இணைப்பிற்கு பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை பாயும்... எச்சரிக்கை விடுத்த தமிழக மின்வாரியம்!! மேலும், உரிமையாளர்களுக்கு மாதாந்திர வாடகை செலுத்தும் வாடகைதாரர்கள் தங்கள் ஆதார் அட்டையை வாடகை இருப்பிடத்தின் மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.