Skip to main content

வாஸ்து மூலம் வாழ்க்கையை செழிப்பாக்குவது எப்படி?

வாஸ்து மூலம் வாழ்க்கையை செழிப்பாக்குவது எப்படி?


POSTED BY ARUN SAJAN

இம்மண்ணில் தோன்றிய மாந்தர்களில் பெரும்பான்மையினர், வளமான வாழ்க்கையை வாழ எண்ணுகின்றனர். அந்த வகையில் நீங்கள் எண்ணிய வாழ்க்கையை பெற கடின உழைப்பு மற்றும் உங்களுக்குள் உறைந்திருக்கும் திறமை பெரிதும் உதவினாலும் கூட, உங்கள் இல்லத்தின் அமைப்பு, உங்கள் வாகன வகையறா, உங்கள் கிரகங்கள் என அனைத்தும் சரியான நிலையில் இருந்தால் மட்டுமே செழிப்பான-சிறப்பான வாழ்க்கையை வாழ முடியும்.

vastu tips to increase the prosperity in your life


ஆகையால், நீங்கள் இருக்கும் இல்லம் மற்றும் நீங்கள் உபயோகிக்கும் வாகன வகையறாக்களின் அமைப்பு மற்றும் அவற்றின் வாஸ்து நிலைகளை பற்றி இந்த பதிப்பில் படித்தறியுங்கள்..
உங்கள் வாழ்வை வளமாக்க உதவும் வாஸ்து குறிப்புகளை இங்கே படித்தறியுங்கள்..

1. வீட்டின் நுழைவாயில்!


1. வீட்டின் நுழைவாயில்!

வீட்டின் நுழைவாயிலில் இருந்து வாஸ்து குறிப்புகளை பற்றி அறிவதில் நுழைவோம் வாருங்கள். உங்கள் வீட்டு நுழைவாயிலின் அமைப்பை பொறுத்து உங்கள் செல்வச்செழிப்பு அமையும். உங்கள் வீட்டின் நுழைவாயில் கிழக்கு அல்லது வடக்கு புறம் பார்த்திருக்குமாறு அமைக்க வேண்டும். தேக்கு மரத்தாலான கதவை பயன்படுத்துவது நல்லது. உங்கள் வீட்டில் நேர்மறை எண்ணங்கள் நிறைய காலணிகளை வீட்டு வாயிலின் முன் அல்லது அருகில் கழற்றி விடுவதை தவிர்த்தல் வேண்டும். மனையின் வாயிற்கதவு இலகுவாக திறந்து மூடக்கூடியதாக, சப்தம் எழுப்பததாக இருத்தல் அவசியம்.

2. தூங்கும் அறை



2. தூங்கும் அறை 

நிம்மதியாக தூங்கி எழுந்தவரால் மட்டுமே புத்துணர்வுடன் பணியாற்ற செய்ய இயலும். அவ்வகையில், உங்களது தூங்கும் ரூம் நல்ல காற்றோட்டமானதாக, வெளிச்சமானதாக இருக்க வேண்டும். தூங்கும் அறையில் எவ்வித துர்நாற்றமும் வீசாதவண்ணம் பார்த்துக் கொள்ளல் வேண்டும். உங்களின் அறையின் சாளரங்களை குறைந்தது 20 நிமிடங்களாவது மூடாது வைத்தல் அவசியம். நீங்கள் உறங்குகையில், தெற்குப்பக்கம் தலையை வைத்து உறங்குவது செழிப்பையும், நலத்தையும் தரும்.

3. செழிப்பின் அடையாளம்!



3. செழிப்பின் அடையாளம்! 

செழிப்பின் அடையாளமாக கருதப்படுவது புத்தர் சிலை. புத்தர் சிலையை டிராயிங் அறை, கிச்சன் அல்லது தோட்டத்தில் வைத்தால், உங்கள் வாழ்வு செழித்தோங்கும். மேலும் சிலையை அல்லது புத்தர் புகைப்படத்தை எத்துணை பெரிதாக வைக்கிறீரோ, அத்துணை அளவு செழிப்படையலாம் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

4. வாஸ்து ஓவியங்கள்



4. வாஸ்து ஓவியங்கள்

வாஸ்து ஓவிய படைப்புகளான கோல்டன் மீன் ஓவியம், அருவியின் ஓவியம், ஓடிக்கொண்டிருக்கும் நீர்நிலை இது போன்ற கூறுகள் நிறைந்த படங்களை வீட்டு சுவர்களில் மாட்டி வைத்தால், வாஸ்து பிரகாரம் உங்கள் வாழ்வில் செழிப்பு உண்டாகும்


5. காற்றில் ஒலி..



5. காற்றில் ஒலி..

காற்றடித்தால் ஒலி எழுப்பக்கூடிய விண்ட் சிம்ஸ் எனப்படும் காற்றுக் கால்களை இல்லத்தில் தொங்க விடுவது, உங்கள் வாழ்க்கையை பாசிட்டிவ் எண்ணங்களுடன் நகர்த்த உதவும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.


6. கடிகாரம்!



6. கடிகாரம்!
உங்கள் வீட்டில் மட்டுப்படும் கடிகாரங்கள் வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் அமைய வேண்டும். மேலும் வீட்டில் இருக்கும் அனைத்து கடிகாரங்களும் ஓடக்கூடிய நிலையில் இருக்க வேண்டியது அவசியம். கடிகாரங்கள் மெதுவாக ஓடினாலோ, நின்றுவிட்டாலோ அவை உங்கள் பணவரவின் வீக்கத்தை குறிப்பிடுவதாக வாஸ்து தெரிவிக்கிறது.


7. பறவைக்கு உணவு!


7. பறவைக்கு உணவு! 

மற்ற உயிர்களுக்கு அன்னமிட்டு காப்பது உங்கள் வாழ்வை வளமாக்கும். ஆகையால், பறவைகளுக்கு உங்கள் வீட்டு பால்கனியில் அல்லது முற்றத்தில், முன்புறத்தில் உணவு வையுங்கள். இது உங்கள் வீட்டின் செல்வச்செழிப்பை அதிகரிக்க உதவும்.

8. உங்கள் பிம்பம்..



8. உங்கள் பிம்பம்..

உங்கள் பிம்பத்தை பிரதிபலிக்கக்கூடிய கண்ணாடியை வீட்டின் முகப்பில், நுழைவாயிலுக்கு நேராக மாட்டுவதை தவிர்த்தல் வேண்டும். மேலும் கண்ணாடியை உங்கள் வீட்டு பணப்பெட்டி இருக்கும் இடத்தில, அந்த அலமாரியின் மீது மாட்டுவது, பணத்தை பலமடங்காக்க உதவும்.

 வீட்டில் ஏதேனும் உடைந்த கண்ணாடி, கண்ணாடி பொருட்கள், கடிகாரம், எலெக்ட்ரானிக் பொருட்கள் இருந்தால், அவற்றை கட்டாயம் அகற்றிவிட வேண்டும்.

9. பர்பிள் நிறம்..!



9. பர்பிள் நிறம்..!

பர்பிள் நிறம் செழிப்பை அதிகரிக்க உதவும்; ஆகையால் பர்பிள் நிறம் கொண்ட ஆர்கிட் பூக்கள் அல்லது பர்பிள் நிற ஜாடிகள், பர்பிள் நிற பொருட்களை வீட்டில் வைத்தல் செல்வச்செழிப்பிற்கு வழிவகுக்கும்.

10. மீன் தொட்டி!



10. மீன் தொட்டி!

மீன் தொட்டி அதாவது அழகான உட்கட்டமைப்பு கொண்ட, நல்ல சுறுசுறுப்பு தன்மை கொண்ட மீன்கள் அல்லது மீன் நிறைந்த மீன் தொட்டியை வீட்டின் ஹாலில் தென்கிழக்கு திசையில் வைப்பது நல்லது; மேலும் மற்ற அறைகளில் மீன் தொட்டியை வடக்கு திசையில் வைப்பது வாஸ்துப்படி சிறந்தது.

 வீட்டில் மீன்தொட்டி வைப்பதால், வீட்டின் அமைதி மற்றும் செழிப்பு பெருகும். எப்பொழுதும் அசைந்து நீந்திக்கொண்டே இருக்கும் மீன், உங்கள் வாழ்வின் நீரோட்ட போன்ற பணவரவினை குறிக்கிறது.

Read more at: Arun Sajan Blog 

Comments

Popular posts from this blog

The Final Countdown (1980) Tamil Dubbed Movie Download

Movie Info Movie Name :  The Final Countdown (1980) Starring :  Kirk Douglas, Martin Sheen, Katharine Ross, James Farentino Directed by :  Don Taylor Genres :  Action/Adventure Rating :  6.7/10 Source :  BD Rip Language :  Tamil Year :  1980 Description :  A time warp takes the aircraft carrier USS Nimitz and its captain (Kirk Douglas) back to Pearl Harbor, Dec. 6, 1941 Subtitle   The Final Countdown (1980) (Sub Title) The Final Countdown (1980) The Final Countdown HD Sample.mp4 Size : 3.27MB       Download Now... The Final Countdown HD.mp4 Size : 341.66MB       Download Now...

ஆன்லைன் ஷாப்பிங்கில் பொருட்களை சரியான விலைகொடுத்து வாங்குவது எப்படி - Buyhatke

  இன்றைய காலகட்டத்தில் நாம் எந்த பொருட்களை வாங்க நினைத்தாலும் நாம் முதலில் செல்வது ஆன்லைன் வர்த்தக தளங்களுக்குதான் அதிலும் மிக முக்கியமாக எலெக்ட்ரானிக் பொடுட்களான மொபைல், கணினி போன்ற பொருட்கள் அதிகமாக வாங்கப்படுகிறது இதற்கு மிக முக்கியமான காரணம் நாம் வாங்கும் பொருட்கள் சரியில்லை என்றாலோ, திருப்தி அளிக்கவில்லை என்றாலோ அதனை திருப்பி கொடுத்துவிட்டு வேறு மாற்று பொருளையோ  அல்லது பணத்தினையோ திரும்ப பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு நாம் வாங்கும் பொருட்களை நாம் சரியான விலை கொடுத்துதான் வாங்குகின்றோமா என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்வேன். ஏனென்றால் நாம் ஆன்லைன் மூலமாக வாங்கும் எந்த பொருளுமே ஒரே விலையில் இருப்பதில்லை என்பதுதான் உண்மை. நாளுக்குநாள் பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டு கொண்டே தான் இருக்கும். மேலும் தள்ளுபடி என்று சொல்லி விற்க்கப்படும் பொருட்களுமே அதிக இலாபத்தில் விற்கப்படும். இதுபோன்ற பிரச்சினையில் இருந்து விடுபட  Buyhatke  என்னும் மென்பொருள் பன்படுகிறது. இந்த மென்பொருள் கூகுள் குரோம் நீட்சியாகவும், Windows, Android, IOS போன்ற மொபைல் செயலிகளாகவும் கிடைக்கிறது

ரயில் பயணிகள் கவனத்திற்கு! ஜனவரி 1 முதல் திருச்செந்தூர் ரயில்கள் பகுதியாக ரத்து!

  ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்செந்தூர் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இங்கு காணலாம்.   ரயில் பாதை பராமரிப்பு பணிகள்: ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை- திருச்செந்தூர் மற்றும் திருச்செந்தூர் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருநெல்வேலி - திருச்செந்தூர் பிரிவில் செய்துங்கநல்லூர் - ஸ்ரீவைகுண்டம் ரயில் பாதையில் ஜனவரி 1 முதல் ஜனவரி 5 வரை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. திருச்செந்தூர் ரயில்கள் பகுதியாக ரத்து: இதன் காரணமாக பாலக்காடு - திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில் (1 6731/16732) மற்றும் சென்னை - திருச்செந்தூர்- சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் (20605/20606) ஆகியவை ஜனவரி 1 முதல் ஜனவரி 5 வரை திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. திருச்செந்தூரிலிருந்து காலை 12.05 மணிக்கு புறப்படும் திருச்செந்தூர் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில், அடுத்த நாள் காலை 10:15 மணிக்கு பாலக்காடு சென்றடையும். இந்த ரயில் 2