Skip to main content

ஆஞ்சநேயருக்கும், சனிபகவானுக்கு இடையே நிகழ்ந்த சண்டை

ஆஞ்சநேயருக்கும், சனிபகவானுக்கு இடையே நிகழ்ந்த சண்டை  


சனிபகவானின் கோபப்பார்வையிலிருந்து தப்புவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. சனிதேவரின் பார்வை பட்டுவிட்டால் அந்த திசை முடியும் வரை அவர்கள் படும் இன்னல்களுக்கு எல்லையே இருக்காது. ஆனால் சிலரை மட்டும் சனிபகவான் சோதித்தாலும் பாதிக்காமல் சென்று விடுவார். அவர்களில் முக்கியமானவர்கள் ஆஞ்சநேயரை வழிபடுபவர்கள். அதற்கு காரணம் ஆஞ்சநேயரின் மீது சனிபகவானுக்கு இருக்கும் பயம்தான்.

Shanidev


சனிபகவான் சிலரின் பக்தர்களை மட்டும் சோதிக்காமல் விட்டுவிடுவார், உதாரணமாக சிவனின் தீவிர பக்தர்கள் சனிபகவானை நினைத்து பயம் கொள்ள தேவையில்லை. அது தனி கதை. இங்கே சனிபகவான் ஏன் ஆஞ்சநேயரை பார்த்து பயப்படுகிறார் என்பதை பார்க்கலாம்.

ஆஞ்சநேயர்


ஆஞ்சநேயர்

வாயுமைந்தனான மஹாபலி ஆஞ்சநேயரை பற்றி நாம் அனைவரும் நன்கு அறிவோம். இராமபிரானின் தீவிர பக்தன். சிவபெருமானின் ருத்ர அம்சம் நிறைந்தவர். இராவணனை கதிகலங்க செய்து பாதி இலங்கையை தன் வாலால் எரித்தவர். இவையெல்லாம் நாம் நன்கு அறிந்ததே ஆனால் நாம் அறியாத ஒரு தகவல் இவர் சூரியபகவானின் சீடர் என்பது. சூரிய பகவான்தான் சனிதேவரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்குள் நடந்த சண்டையால்தான் சனிபகவான் ஆஞ்சநேயரின் மீது அச்சம் கொள்கிறார்

சூரிய பகவான்


சூரிய பகவான்

ஆஞ்சநேயர் குழந்தையாய் இருக்கும்போது எரியும் சூரியனை சுவைமிக்க பழம் என நினைத்து அதனை பறிக்க விண்ணுலகம் பறந்து சென்றார். பாலகன் ஒருவன் தன்னை நோக்கி பறந்து வருவதை கண்ட சூரியதேவன் இந்திரனிடம் முறையிட்டார். இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் பாலகனான அனுமனை தாக்கினார். இதனால் அனுமனின் தந்தையான வாயுபகவான் சூரியதேவன் மீது கோபம் கொண்டார். இதனால் கவலையுற்ற சூரியபகவான் ஆஞ்சநேயரை தன் சீடனாக ஏற்றுக்கொள்வதாக வாயுபகவானுக்கு வாக்களித்தார்.

சீடரான அனுமன்


சீடரான அனுமன் 

சூரியபகவானுக்கு சீடராய் இருப்பதற்கு ஆஞ்சநேயரும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். ஆனால் சூரியபகவானின் வெப்பத்தால் ஆஞ்சநேயர் அவர் அருகில் செல்ல இயலவில்லை. எனவே சூரியபகவானின் ரதத்தில் இருந்த குதிரையின் மீது அமர்ந்துகொண்டு அவர் போதித்த வித்தைகளை கற்றுக்கொண்டார் ஆஞ்சநேயர். ஆண்டுகள் கடக்க ஆஞ்சநேயருக்கு அளவில்லா கல்வியையும், சக்தியையும் வழங்கினார் ஆஞ்சநேயர்.

குருதட்சணை


குருதட்சணை

ஆஞ்சநேயருடைய கல்வி நிறைவு பெற்றதும் தன் குருவான சூரிய பகவானுக்கு குருதட்சணை கொடுக்க விரும்பினார் அனுமன். சூரியபகவானோ குருதட்சணை எதுவும் வேண்டாம் எனக்கூற ஆஞ்சநேயரோ பிடிவாதமாக குருதட்சணை பெற்றுக்கொள்ள வேண்டும் எனக்கூறிவிட்டார். எனவே சூரியபகவான் தனக்கு குருதட்சணை எதுவும் வேண்டாம் அதற்கு பதிலாக தனது மகன் சனிதேவனின் கர்வத்தை அடக்குமாறு ஆஞ்சநேயரிடம் கூறினார்.

சனிபகவானின் கர்வம்

சனிபகவானின் கர்வம்

நவக்கிரகங்களுள் மிகமுக்கியமான ஒருவராக சனிபகவான் இருக்கிறார். அதற்கு காரணம் அவருக்கு சிவபெருமான் வழங்கிய வரம்தான். வாழ்ந்து முடித்து மேல் உலகம் வருபவர்களை எமதர்மன் தண்டிப்பது போல பூமியில் வாழும்போதே மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு அவர்களுக்கு தண்டனை கொடுக்கும் அரிய வரத்தை சனிபகவானுக்கு சிவபெருமான் வழங்கினார். இதனால் தன் சக்தியின் மீது சனிபகவானுக்கு கர்வம் உண்டாயிற்று. தன் தந்தை உட்பட அனைவரையும் உதாசீனப்படுத்த தொடங்கினார். அவரின் கர்வத்தை அடக்க அனைத்து தேவர்களும் தருணம் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.

சனிபகனுடனான வாக்குவாதம்


சனிபகனுடனான வாக்குவாதம்

தன் குருவின் ஆணைக்கிணங்க சனிபகவானை நோக்கி சென்றார் ஆஞ்சநேயர். சனிபகவானின் இடத்திற்கு சென்று அவரிடம் தன் தந்தையிடம் சென்று மன்னிப்பு கேட்குமாறு கூறினார் ஆஞ்சநேயர். தன் உலகத்திற்குள் எப்படி இவ்வளவு எளிதாக ஆஞ்சநேயர் நுழைந்தார் என்பதை நம்ப முடியாத சனிபகவான் அவரை திரும்ப செல்லும்படி உத்தரவிட்டார். ஆனால் ஆஞ்சநேயர் அங்கிருந்து செல்வதாக இல்லை. இதன் கோபத்தின் எல்லைக்கே சென்றார் சனிபகவான்.

சனிபகவானின் முடிவு

சனிபகவானின் முடிவு 

தன் சக்தியின்மை மீது அதீத கர்வம் கொண்ட சனிபகவான் தன் பேச்சை கேட்காத ஆஞ்சநேயருக்கு தக்க பாடம் புகட்ட எண்ணினார். அதற்காக அவரின் தோள்பட்டையின் மீது ஏறி அமர்ந்து கொண்டார். அதோடு நிற்காமல் தன் மொத்த சக்தியையும் உபயோகப்படுத்தி ஆஞ்சநேயரை கீழ்நோக்கி அழுத்தினார். ஆனால் அங்குதான் சனிபகவான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்.

ஆஞ்சநேயரின் பலம்


ஆஞ்சநேயரின் பலம்

சனிபகவான் எதிர்பார்த்தது போல அவரின் பலம் ஆஞ்சநேயரின் மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. மாறாக ஆஞ்சநேயர் தன் உருவத்தை பெரிதாக்கி கொண்டே சென்றார். சனிபகவான் எவ்வளவு முயன்றும் அவரால் இதனை தடுக்க முடியவில்லை அதேசமயம் ஆஞ்சநேயரின் தோளை விட்டு இறங்கவும் இயலவில்லை. இறுதியில் இடத்தின் மேற்கூரைக்கும், ஆஞ்சநேயரின் தோளுக்கும் இடையில் சிக்கி வலியில் துடித்தார் சனிபகவான்.

சனிபகவான் கொடுத்த வரம்

சனிபகவான் கொடுத்த வரம்

இறுதியில் வலிதாங்க இயலாமல் தன் தோல்வியை ஒப்புக்கொண்ட சனிபகவான் தன்னை மன்னிக்கும்படியும், ஆஞ்சநேயர் சொல்வதை தான் கேட்பதாகவும் ஒப்புக்கொண்டார். அப்பொழுதுதான் அவருக்கு புரிந்தது தன் பலத்தின் மீது அவர் கொண்டிருந்த கர்வம். தன் கர்வத்தை அடக்கிய ஆஞ்சநேயரை பாராட்டியதுடன் ஆஞ்சநேயரை மனமாற வழிபடுவர்களை தன்னுடைய கோபப்பார்வை எதுவும் செய்யாது என்றும், அவர்களுக்கு என் பூரண அருள் கிடைக்கும் என்றும் வரம் கொடுத்தார். இதனால்தான் தன்னை விட பலசாலியான ஆஞ்சநேயரை கண்டு பயம்கொள்கிறார் சனிபகவான்.

THANKS FOR READING POSTED BY ARUN SAJAN 

Comments

Popular posts from this blog

The Final Countdown (1980) Tamil Dubbed Movie Download

Movie Info Movie Name :  The Final Countdown (1980) Starring :  Kirk Douglas, Martin Sheen, Katharine Ross, James Farentino Directed by :  Don Taylor Genres :  Action/Adventure Rating :  6.7/10 Source :  BD Rip Language :  Tamil Year :  1980 Description :  A time warp takes the aircraft carrier USS Nimitz and its captain (Kirk Douglas) back to Pearl Harbor, Dec. 6, 1941 Subtitle   The Final Countdown (1980) (Sub Title) The Final Countdown (1980) The Final Countdown HD Sample.mp4 Size : 3.27MB       Download Now... The Final Countdown HD.mp4 Size : 341.66MB       Download Now...

ஆன்லைன் ஷாப்பிங்கில் பொருட்களை சரியான விலைகொடுத்து வாங்குவது எப்படி - Buyhatke

  இன்றைய காலகட்டத்தில் நாம் எந்த பொருட்களை வாங்க நினைத்தாலும் நாம் முதலில் செல்வது ஆன்லைன் வர்த்தக தளங்களுக்குதான் அதிலும் மிக முக்கியமாக எலெக்ட்ரானிக் பொடுட்களான மொபைல், கணினி போன்ற பொருட்கள் அதிகமாக வாங்கப்படுகிறது இதற்கு மிக முக்கியமான காரணம் நாம் வாங்கும் பொருட்கள் சரியில்லை என்றாலோ, திருப்தி அளிக்கவில்லை என்றாலோ அதனை திருப்பி கொடுத்துவிட்டு வேறு மாற்று பொருளையோ  அல்லது பணத்தினையோ திரும்ப பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு நாம் வாங்கும் பொருட்களை நாம் சரியான விலை கொடுத்துதான் வாங்குகின்றோமா என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்வேன். ஏனென்றால் நாம் ஆன்லைன் மூலமாக வாங்கும் எந்த பொருளுமே ஒரே விலையில் இருப்பதில்லை என்பதுதான் உண்மை. நாளுக்குநாள் பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டு கொண்டே தான் இருக்கும். மேலும் தள்ளுபடி என்று சொல்லி விற்க்கப்படும் பொருட்களுமே அதிக இலாபத்தில் விற்கப்படும். இதுபோன்ற பிரச்சினையில் இருந்து விடுபட  Buyhatke  என்னும் மென்பொருள் பன்படுகிறது. இந்த மென்பொருள் கூகுள் குரோம் நீட்சியாகவும், Windows, Android, IOS போன்ற மொபைல் செயலிகளாகவும் கிடைக்கிறது

ரயில் பயணிகள் கவனத்திற்கு! ஜனவரி 1 முதல் திருச்செந்தூர் ரயில்கள் பகுதியாக ரத்து!

  ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்செந்தூர் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இங்கு காணலாம்.   ரயில் பாதை பராமரிப்பு பணிகள்: ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை- திருச்செந்தூர் மற்றும் திருச்செந்தூர் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருநெல்வேலி - திருச்செந்தூர் பிரிவில் செய்துங்கநல்லூர் - ஸ்ரீவைகுண்டம் ரயில் பாதையில் ஜனவரி 1 முதல் ஜனவரி 5 வரை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. திருச்செந்தூர் ரயில்கள் பகுதியாக ரத்து: இதன் காரணமாக பாலக்காடு - திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில் (1 6731/16732) மற்றும் சென்னை - திருச்செந்தூர்- சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் (20605/20606) ஆகியவை ஜனவரி 1 முதல் ஜனவரி 5 வரை திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. திருச்செந்தூரிலிருந்து காலை 12.05 மணிக்கு புறப்படும் திருச்செந்தூர் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில், அடுத்த நாள் காலை 10:15 மணிக்கு பாலக்காடு சென்றடையும். இந்த ரயில் 2