Skip to main content

தூக்கத்தில் பேசுவதற்கான காரணங்களும், தடுக்கும் முறைகளும்

தூக்கத்தில் பேசுவதற்கான காரணங்களும், தடுக்கும் முறைகளும்


மனிதர்களின் மூளையும், மனதும் அமைதியாய் இருக்கும் ஒரே நேரம் இரவு தூங்கும் போதுதான். தூங்கும் நேரத்தில் ஏற்படும் பிரச்சினை என்றால் அது குறட்டை விடுவதுதான். கிட்டதட்ட அனைவருமே இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்போம். ஆனால் இது மட்டுமின்றி அருகில் இருப்பவர்களின் தூக்கத்தை கெடுக்கும் இன்னொரு பிரச்சினையும் உள்ளது. அதுதான் தூக்கத்தில் பேசுவது.

Sleep talking causes, symptoms and treatment


குறட்டை விடுவது அளவிற்கு இது பொதுவான பிரச்சனையாக இல்லையென்றாலும் இப்பொழுது இளைஞர்களிடையே இது அதிகம் பரவி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அதிக பணிச்சுமை மற்றும் அளவில்லாத இன்டர்நெட் உபயோகமும்தான். இந்த பதிவில் தூக்கத்தில் பேச காரணம் என்ன என்பதையும், அதனை தடுக்கும் வழிமுறைகளையும் பார்க்கலாம்.

தூக்கத்தில் பேசுதல்


தூக்கத்தில் பேசுதல்

தூக்கத்தில் பேசுவது என்பது சம்மிலாக் என அழைக்கப்படும் பராசோமனியாவின் ஒருவகையாகும். தூக்கத்தில் செய்யும் அசாதரண செயல் என்பது இதன் பொருள். மனஅழுத்தம், சோர்வு, மதுப்பழக்கம், தூக்கமின்மை என இது ஏற்பட பல காரணங்கள் உள்ளது. இது மட்டுமின்றி மரபணு மூலமாகவும் இந்த பிரச்சினை ஏற்படலாம். மருத்துவரீதியாக இதில் எந்த பாதிப்பும் இல்லை.

தெரிந்து கொள்ளவேண்டியது


தெரிந்து கொள்ளவேண்டியது

தூக்கத்தில் பேசுபவர்களுக்கு அவர்கள் என்ன பேசுகிறார்கள் அல்லது பேசுகிறார்களா என்பது 90 சதவீதம் தெரிய வாய்ப்பில்லை. காலையில் எழுந்து நடந்ததை கூறினால் இல்லவேயில்லை என்று வாதிடுவார்கள். பகல் நேரங்களில் பேசுவதற்கும், தூக்கத்தில் பேசுவதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும். இந்த பேச்சு அன்று நடந்த சம்பவங்கள் பற்றியோ அல்லது தூக்கத்தில் வரும் கனவுகள் பற்றியோ இருக்கலாம்.
யாரெல்லாம் தூக்கத்தில் பேசுவார்கள்?

யாரெல்லாம் தூக்கத்தில் பேசுவார்கள்?

தூக்கத்தில் பேசுவது என்பது அனைவருக்கும் ஏற்படக்கூடிய பிரச்சனையாகும். ஆனால் புள்ளி விவரங்களின் படி பெண்களை விட ஆண்களும், குழந்தைகளும் தூக்கத்தில் அதிகம் பேசுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 3 வயது முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள் தூக்கத்தில் அதிகம் பேசுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

தூக்கத்தில் ரகசியங்களை உளறிவிடுவார்களா?


தூக்கத்தில் ரகசியங்களை உளறிவிடுவார்களா? 

இந்த பயம் பெரும்பாலும் ஆண்களுக்கே இருக்கும். ஆனால் இதில் ஆறுதலான செய்தி யாதெனில் தூக்கத்தில் நீங்கள் ரகசியங்களை ஒருபோதும் பேசமாட்டிர்கள். சொல்லப்போனால் நீங்கள் பேசுவது பெரும்பாலும் யாருக்கும் புரியாது. உங்கள் துணையோ அல்லது பெற்றோரோ நீங்கள் பேசுவது என்ன என்பதை கண்டறிய முயற்சித்தால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். சிலசமயம் நீங்கள் பேசுவது முழுமையாக கற்பனையாக கூட இருக்கலாம். எனவே நீங்கள் பேசியதை கண்டுபிடித்து விட்டேன் உன்மையை கூறு என்று உங்கள் மனைவி கேட்டால் நீங்களாக உளறி மாட்டிக்கொள்ளாதீர்கள்.

வெளிப்புற காரணங்கள்


வெளிப்புற காரணங்கள்

தூக்கத்தில் பேச பல வெளிப்புற காரணங்கள் உள்ளது. உதாரணத்திற்கு அதிக மனஅழுத்தம், சோர்வு, தூக்கமின்மை, பாதி தூக்கம் போன்றவை காரணமாக இருக்கலாம். குறிப்பாக மது அருந்திவிட்டு தூங்கும்போது இந்த பிரச்சினை அதிகம் ஏற்படலாம். மேலும் தூக்கம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தாலும் இது ஏற்பட வாய்ப்புள்ளது.
மரபணு


மரபணு 

ஒருவேளை உங்கள் பெற்றோரில் ஒருவருக்கோ அல்லது தாத்தாவுக்கோ இந்த பிரச்சினை இருந்தால் உங்களுக்கும் இந்த பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக தந்தைக்கு இந்த பிரச்சினை இருந்தால் குழந்தைக்கு இந்த பிரச்சினை ஏற்பட 90 சதவீத வாய்ப்புள்ளது.

தூக்க வியாதிகள்


தூக்க வியாதிகள்

தூக்கம் தொடர்பான வியாதிகளான அப்னியா, குழப்பநிலை, REM தூக்க நிலை போன்ற வியாதிகள் இதனை ஏற்படுத்தலாம். இதில் முக்கியமான ஒன்று கெட்ட கனவுகள், நீங்கள் தூக்கத்தில் பேசுவது பெரும்பாலும் உங்கள் கனவின் பிரதிபலிப்பாகவே இருக்கும்.

பயம்

பயம்

எந்த வயதினரையும் தூக்கத்தில் பேச வைக்க கூடிய ஒரு உணர்வு பயம் ஆகும். பேய் படம் பார்த்தாலோ அல்லது பயமுறுத்தும் ஏதேனும் ஒரு சம்பவம் நிகழ்ந்தாலோ அது அவர்கள் மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதன் விளைவாக தூக்கத்தில் பேச தொடங்குவார்கள்.

மனநலம்


மனநலம்

இளைஞர்கள் தூக்கத்தில் பேசுவது என்பது அவர்கள் மனநலம் தொடர்பான ஒன்றாக கருதப்படுகிறது. இது அவர்களின் மனதை வெகுவாக பாதிக்கக்கூடும். இதை சாதாரணமான ஒன்றாக நினைக்க கூடாது.

மருந்துகள்



மருந்துகள் 

நீங்கள் சாப்பிடும் சில மருந்துகள் கூட உங்களை தூக்கத்தில் பேச தூண்டலாம். குறிப்பாக மாண்டேலுக்காஸ்ட் என்னும் ஆஸ்த்மாவுக்காக எடுத்துக்கொள்ளப்படும் மருந்து பார்சோம்னியாவை உண்டாக்கக்கூடும். இதன் விளைவாக தூக்கத்தில் பேசுவது அல்லது நடப்பது போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும்.

ஆபத்தானதா?


ஆபத்தானதா?

மருத்துவரீதியாக பார்க்கும்போது இது ஆபத்தானதல்ல. ஆனால் இது உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். மேலும் இது அருகில் தூங்குபவர்களுக்கு பெரிய தொந்தரவாக இருக்கும்.

தடுக்கும் முறைகள்


தடுக்கும் முறைகள் இதனை தடுப்பது என்பது உங்கள் கைகளில்தான் உள்ளது. முதலில் நீங்கள் தூங்கும் நேரத்தை ஒழுங்குபடுத்தவும், மது அருந்தும் பழக்கத்தை குறைத்து கொள்ளுங்கள், மனஅழுத்தத்தை கட்டுப்பாட்டில் வையுங்கள், இது எதுவுமே பயன் தரவில்லை எனில் மருத்துவரை நாடுங்கள், மருந்துகளின் மூலமும் இதனை சரி செய்யலாம்.

Thanks For Reading Dont Forgot To Share By Arun Sajan 

Comments

Popular posts from this blog

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க...

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க... யாருக்கு தான் இந்த ஆசை இருக்காது. நாமும் நல்ல வசதியோடு எந்த கஷ்டமும் இல்லாம, அள்ள அள்ள பணம் குறையாம இருக்கணும்னு. ஆனால் நம்மில் பெரும்பாலானோர் அப்படி ஆசைப்படுவதோடு நிறுத்தி விடுகிறோம். அதற்கான முயற்சிகளை எடுப்பதே இல்லை. தொழில் விருத்தி சிலருக்கு வாழ்க்கையில் நல்ல தொழில் இருக்கும். அதை விருத்தி செய்ய எல்லா விதமான முயற்சிகளையும் செய்து கொண்டே இருப்பார்கள். ஆனாலும் அதிர்ஷ்டம் என்பது கடவுள் நம்பிக்கை என்பதுவும் கூட முக்கியமல்லவா?... அதனாலேயே சிலருடைய அவ நம்பிக்கையால் தான் என்ன முயற்சி செய்தாலும் அது வெற்றியடையாமலோ அல்லது கால தாமதமோ ஆகிவிடுகிறது தன லாபம் உங்களுடைய வீட்டில் எப்போதும் தன ஆகர்ஷணம் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டுமென்றால்அதற்கு சின்ன சின்ன பரிகாரங்கள் உள்ளன. அதை முழு மனதோடு நம்பி செய்தாலே போதும் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாமல் இருந்து கொண்டே இருக்கும். அப்படி என்ன பரிகாரங்கள் என்ன வேண்டும் என்று பார்ப்போம். பரிகாரம்  சின்ன சின்ன தெய்வா...

தஞ்சாவூர்-கும்பகோணம் பைபாஸ் ரைடர்ஸ் பஸ் இயக்கம்

இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே  தேசிய நெடுஞ்சாலை வழியாக புதிய நேரடி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பயண நேரம் வெகுவாக குறைந்துள்ளது. இதை மக்கள் மற்றும் பயணிகள் வரவேற்றுள்ளனர்.  தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும். இதனால் இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. இந்த பேருந்து சேவை ஒரு நாளைக்கு 18 முறை இயக்கப்படுகிறது. கும்பகோணத்தில் இருந்து காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பேருந்து புறப்படும். தஞ்சாவூரில் இருந்து காலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை பேருந்து இயக்கப்படும். இந்த புதிய பேருந்துகள் "பைபாஸ் ரைடர்ஸ்" சேவையின் ஒரு பகுதியாக இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் NH 36-ல் தஞ்சாவூர் - சோழபுரம் இடையே இயக்கப்படுகின்றன. 50 கி.மீ தூரத்தை இப...

மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்!

  மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்! மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் செம்மங்குளம் அருகே தனியார் பள்ளியில் சிறுத்தை முகாமிட்டிருப்பதால் அப்பள்ளிக்கு இன்று விடுமுறையை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் அருகே பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் திடீரென சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. தற்போது சிறுத்தையின் நடமாட்டத்தை சிசிடிவி கேமரா மூலம் வனத்துறையினரும் கல்வித் துறை அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் அங்கும் இங்குமாக சிறுத்தை நடமாடிக் கொண்டே இருக்கிறது.