Skip to main content

வெட்டி உதார் பேசாம ஒழுங்கா போயிடு

 
 

மத அடிப்படைவாதிகள் எப்போதுமே முரடர்களாகவும் மூடர்களாகவுமே இருப்பார்கள் என்பது நம்ம ஊர் காவிகள் மட்டுமல்ல, பாகிஸ்தானில் உள்ளவர்களும் உதாரணம்.
இன்று காலை ஹிந்து நாளிதழில் பார்த்த செய்தியில்
பாகிஸ்தானிலிருந்து செயல்படுகிற ஹிஸ்புல் மொஹாஜிதீன்   அமைப்பின் தலைவரான  சையது சலாஹீதீன் என்பவர்,
“இந்தியாவின் எந்த மூலையிலும் எங்களால் தாக்குதல் நடத்த முடியும். அந்த அளவிற்கு எங்கள் அமைப்பு விரிவடைந்துள்ளது” என்று ஆணவமாக கொக்கரித்துள்ளார்.
இது ஒரு வெற்று உதார் என்பதை படிக்கையிலேயே தெரிகிறது.   
ஆனால் இந்த வெட்டி உதாரின் விளைவுகள் என்ன ஆகும் என்பதை அந்த மனிதன் புரிந்து கொள்ளவில்லை என்பதால்தான் மூடர் என்று அழைக்கிறேன்.
இவரெல்லாம் இப்படிச் சொல்வதால் இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்களை காவிகள் தேச விரோதியாக சித்தரிக்கிறது. அவர்களுக்கு எதிராக நச்சைப் பரப்புகிறது. அவசியமே இல்லாமல் அவர்கள் தேசபக்தியை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் வருகிறது. 
எல்லைக்கு வெளியே இருப்பவர்கள் பேசும் வெட்டி உதாருக்காக, தேசத்துக்கு உள்ளே இருப்பவர்கள் சிலுவையில் அறையப்பட வேண்டுமா?
ஏதோ சொல்வார்களே, வெறி கொண்ட குரங்கிற்கு சாராயமும் ஊற்றிக் கொடுப்பது என்று, அது போல சங் பரிவாரக்கும்பல் பிரச்சினை செய்ய இவரே எடுத்துக் கொடுக்கிறார்.
இந்த மாதிரியான ஆட்களெல்லாம் வாய் மூடி ஒழுங்காக இருப்பதே நல்லது.

Comments

Popular posts from this blog

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க...

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க... யாருக்கு தான் இந்த ஆசை இருக்காது. நாமும் நல்ல வசதியோடு எந்த கஷ்டமும் இல்லாம, அள்ள அள்ள பணம் குறையாம இருக்கணும்னு. ஆனால் நம்மில் பெரும்பாலானோர் அப்படி ஆசைப்படுவதோடு நிறுத்தி விடுகிறோம். அதற்கான முயற்சிகளை எடுப்பதே இல்லை. தொழில் விருத்தி சிலருக்கு வாழ்க்கையில் நல்ல தொழில் இருக்கும். அதை விருத்தி செய்ய எல்லா விதமான முயற்சிகளையும் செய்து கொண்டே இருப்பார்கள். ஆனாலும் அதிர்ஷ்டம் என்பது கடவுள் நம்பிக்கை என்பதுவும் கூட முக்கியமல்லவா?... அதனாலேயே சிலருடைய அவ நம்பிக்கையால் தான் என்ன முயற்சி செய்தாலும் அது வெற்றியடையாமலோ அல்லது கால தாமதமோ ஆகிவிடுகிறது தன லாபம் உங்களுடைய வீட்டில் எப்போதும் தன ஆகர்ஷணம் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டுமென்றால்அதற்கு சின்ன சின்ன பரிகாரங்கள் உள்ளன. அதை முழு மனதோடு நம்பி செய்தாலே போதும் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாமல் இருந்து கொண்டே இருக்கும். அப்படி என்ன பரிகாரங்கள் என்ன வேண்டும் என்று பார்ப்போம். பரிகாரம்  சின்ன சின்ன தெய்வா...

தஞ்சாவூர்-கும்பகோணம் பைபாஸ் ரைடர்ஸ் பஸ் இயக்கம்

இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே  தேசிய நெடுஞ்சாலை வழியாக புதிய நேரடி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பயண நேரம் வெகுவாக குறைந்துள்ளது. இதை மக்கள் மற்றும் பயணிகள் வரவேற்றுள்ளனர்.  தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும். இதனால் இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. இந்த பேருந்து சேவை ஒரு நாளைக்கு 18 முறை இயக்கப்படுகிறது. கும்பகோணத்தில் இருந்து காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பேருந்து புறப்படும். தஞ்சாவூரில் இருந்து காலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை பேருந்து இயக்கப்படும். இந்த புதிய பேருந்துகள் "பைபாஸ் ரைடர்ஸ்" சேவையின் ஒரு பகுதியாக இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் NH 36-ல் தஞ்சாவூர் - சோழபுரம் இடையே இயக்கப்படுகின்றன. 50 கி.மீ தூரத்தை இப...

மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்!

  மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்! மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் செம்மங்குளம் அருகே தனியார் பள்ளியில் சிறுத்தை முகாமிட்டிருப்பதால் அப்பள்ளிக்கு இன்று விடுமுறையை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் அருகே பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் திடீரென சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. தற்போது சிறுத்தையின் நடமாட்டத்தை சிசிடிவி கேமரா மூலம் வனத்துறையினரும் கல்வித் துறை அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் அங்கும் இங்குமாக சிறுத்தை நடமாடிக் கொண்டே இருக்கிறது.