Skip to main content

நீரிழிவை கட்டுப்படுத்த உதவும் சோயாபீன்... அடிக்கடி உணவில் சேர்த்துக்கோங்க...

 நீரிழிவை கட்டுப்படுத்த உதவும் சோயாபீன்... அடிக்கடி உணவில் சேர்த்துக்கோங்க.


தற்போது உலகின் மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ள ஒரு நோய்தான் நீரிழிவு நோய். உலகில் அதிக மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கபட்டுள்ளனர். இந்த நிலையில் நீரிழிவு நோய் குணமாக சோயா பீன் உதவுவதாக கூறப்படுகிறது.




நீரிழிவு நோய் என்பது தற்போதைய 21 ஆம் நூற்றாண்டில் உலகின் பெரும் சுகாதார பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. 2030 ஆம் ஆண்டில் உலக அளவில் சுமார் 366 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவர் என ஒரு ஆய்வு கூறுகிறது. பெரும்பாலும் மக்களின் வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாகவே நீரிழிவு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

நீரிழிவு நோயை நிர்வகிக்க உணவுகளில் மாற்றத்தை செய்ய வேண்டியது அவசியமாகும். இந்த ஆரோக்கியமான உணவுகளில் சோயாபீன் முக்கிய பங்கு வகிக்கிறது. இது கார்போஹைட்ரேட்கள், நார்ச்சத்து, புரதம், பைடோஸ்டெரால், பைடிக் அமிலம், ஐசோஃப்ளேவான் மற்றும் தாதுக்களை கொண்டுள்ளது. இவை நீரிழிவு நோயாளிகளுக்கு பயனளிப்பவையாக உள்ளன. மேலும் நீரிழிவு நோயின் ஆபத்து விகிதத்தை இது குறைக்கிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு சோயாபீன் எவ்வாறு உதவுகிறது என்பதை இப்போது பார்ப்போம்.

​கொழுப்பின் அளவை குறைக்கலாம்

சோயாபீன் பருப்பு வகையை சார்ந்த தானியமாகும். இது கிழக்கு ஆசியாவின் பூர்வீக உணவாக உள்ளது. அங்கு இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சோயாபீன் நீரிழிவு நோயாளிகளுக்கு அவர்களின் உடலில் இன்சுலின் பற்றாக்குறை அல்லது குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை இது தடுக்கிறது.

நீரிழிவு நோயின்போது அது கொழுப்பின் அளவை உயர்த்துகிறது. சோயாபீன் கொழுப்பின் அளவை குறைக்கவும் இன்சுலினின் உணர்திறனை நிர்வகிக்கவும் மேலும் இரத்த குளுக்கோஸை மேம்படுத்தவும் இது உதவும். முக்கியமாக இது காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்தை கொண்டிருப்பதால் இது சர்க்கரை நோயை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

​நார்ச்சத்து நிறைந்தவை

குளுக்கோஸ் அளவை குறைப்பதிலும் மன நிறைவை அளிப்பதிலும் நார்ச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. 100 கிராம் சோயா பீனில் 9.3 கிராம் ஃபைபர் உள்ளது. எலிகளுக்கு சோயாபீன் ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டது. அப்போது சோயாபீன் தரப்படாத எலிகளை விடவும் சோயாபீன் பெற்ற எலிகளுக்கு 60 நிமிடங்களில் உடலில் குளுக்கோஸ் அளவு குறைந்து காணப்பட்டது.

மேலும் இது பழுப்பு அரிசியை விட சிறந்த அளவில் குளுக்கோஸை குறைக்கும். எனவே சோயாப்பீன் உட்கொள்வது என்பது உடலில் உள்ள அதிகப்படியான குளுக்கோஸை குறைக்க உதவுகிறது.

​குறைந்த க்ளைசெமிக்

ஒவ்வொரு உணவுக்கும் ஜி.ஐ மதிப்பெண் என்ற மதிப்பெண் தரப்பட்டுள்ளது. சோயா பீனின் ஜி.ஐ மதிபெண் ஆனது 16 ஆகும். இது மிகவும் குறைந்த அளவிலான ஜி.ஐ மதிப்பை கொண்டுள்ளது. சோயாபீனில் உள்ள காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்து ஆகியவையே இந்த குறைந்த க்ளைசெமிக் குறியீட்டிற்கு காரணமாக உள்ளது. சோயாபீன் உட்கொள்ளும்போது அது குளுக்கோஸின் அளவை மெதுவாக அதிகரிக்கிறது. இதனால் உடலில் அதன் அளவுகள் இயல்பானதாக இருக்கும்.

​ஐசோஃப்ளேவான்கள்

ஒரு ஆய்வின்படி அதிக ஐசோஃப்ளேவான்கள் உள்ளவர்களில் குறைந்த அளவில் மட்டும் குளுக்கோஸ் காணப்பட்டது தெரிய வந்தது. இரண்டாம் வகை நீரிழிவு நோயின் அபாயத்தை குறைப்பதில் ஐசோஃப்ளேவான் மற்றும் சோயாபீன் உட்கொள்ளல் முக்கிய பங்கு வகிக்கிறது. https://www.amazon.in/gp/product/B01FR5WX3E/ref=as_li_qf_asin_il_tl?ie=UTF8&tag=ancollections-21&creative=24630&linkCode=as2&creativeASIN=B01FR5WX3E&linkId=13d735f6c19e7b4e20d1bf487093faa4 ஏனெனில் நமது உணவு முறையே இரத்த குளுக்கோஸ் அளவில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் இது நீரிழிவு நோயின் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது.

​அதிக புரதங்கள்

நீரிழிவு நோயாளிகளுக்கு புரதம் தேவையான மற்றும் முக்கியமான ஒரு ஊட்டச்சத்து ஆகும். ஏனெனில் இது நீரிழிவு நோயாளிகளுக்கு நிலையான ஆற்றலை அளிக்க உதவுகிறது. மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு உள்ள மிகப்பெரும் பிரச்சனையான எடை அதிகரிப்பை கட்டுப்படுத்த இது உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக புரதங்கள் தேவைப்பட்டாலும் அதை அவர்கள் பெருவதில் சிக்கல்கள் உள்ளன.

சிவப்பு இறைச்சியில் அதிக புரதங்கள் இருந்தாலும் விலங்கு மூலங்களில் இருந்து புரதத்தை எடுத்துக்கொள்வது நீரிழிவு நோயை கொண்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. எனவே தாவர அடிப்படையிலான புரத மூலமாக உள்ள சோயாபீன் போன்ற உணவுகளில் புரதத்தை பெறுவதன் மூலம் நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்க முடியும்.

​கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை பாதுக்காக்க உதவுகிறது

சோயாபீன் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் பாதுகாப்பு விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. உடலில் சர்க்கரை அளவுகள் அதிகமாக இருப்பதால் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் வீக்கம் ஏற்படுவதற்கான அபாயங்கள் உள்ளன. சோயாபீனில் உள்ள நார்ச்சத்தானது குளுக்கோஸ் அளவை நிர்வகிக்கவும், கொழுப்பின் அளவை குறைக்கவும் உதவுவது மட்டுமின்றி கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை பாதுகாத்து அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவுகின்றன.

​உணவுக்கு பிறகு ஏற்படும் ஹைப்பர் க்ளைசீமியாவை தடுக்கிறது

ஒரு ஆய்வில் நீரிழிவு நோயாளிகளுக்கு சோயாபீன் உணவுகள் வழங்கப்பட்டது. அப்போது மற்ற உணவுகள் வழங்கப்பட்ட நீரிழிவு நோயாளிகளோடு ஒப்பிடுகையில் அவர்களுக்கு உணவுக்கு பிறகு குளுக்கோஸ் அளவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு சோயாபீன் உகந்தது என இதன் மூலம் அறிய முடிகிறது.

​சோயாபீனை உட்கொள்ள சில டிப்ஸ்

சோயாபீனை கொண்டு செய்யப்படும் உணவுகளை புளித்த மற்றும் புளிக்காத உணவுகள் என இரு வகையாக பிரிக்கலாம். புளித்த சோயா தயாரிப்புகளில் சோயா சாஸ் மற்றும் மிசோ ஆகியவை அடங்கும். ஆனால் புளிக்காத உணவுகளில் சோயா பால், சோயா மாவு மற்றும் சோயா விதைகள் ஆகியவை அடங்கும்.

ஒரு ஆய்வில் மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆசிய மக்கள் குறைவான அளவில் நீரிழிவு நோயை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் அவர்கள் பாரம்பரியமாகவே புளித்த சோயாபீன் தயாரிப்புகளை உட்கொள்கின்றனர்.

பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள், பெப்டைடுகள், ஃபைபர் மற்றும் ஐசோஃப்ளேவான்கள் ஆகியவை சோயாபீனின் ஆண்டிபயாடிக் விளைவுக்கு முக்கிய காரணமாக உள்ளன. இவை இன்சுலின் சுரப்பை மேம்படுத்தவும் தடுக்கவும் உதவுகின்றன.

​கவனிக்க வேண்டிய விஷயங்கள்

சோயா பீன் ஒரு பிரதானமான உணவு ஆகும். ஆகையால் நீங்கள் சோயாபீனை மற்ற உணவுகளுடன் இணைக்கிறீர்கள் என்றால் அவை ஆரோக்கியமான உணவுகள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உதாரணமாக நீங்கள் சோயாபீனை வேக வைத்த உருளைக்கிழங்கு அல்லது அரிசியுடன் சேர்க்கும்போது அது நீரிழிவு எதிர்ப்புக்கு பயனுள்ளதாக இருக்காது. மேலும் இதனால் உங்கள் உடலில் இது குளுக்கோஸ் அளவை அதிகரிக்கலாம்.

சோயாபீன் நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமான உணவாகும். ஆனால் அதற்காக அதை அதிகமாக உட்கொள்ள வேண்டும் என்று அர்த்தமல்ல. ஏனெனில் சோயாபீனை அதிகமாக உட்கொள்வது மலச்சிக்கல், குமட்டல், வீக்கம் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் அதில் உள்ள அதிக ஃபைபர் புரதம் மற்றும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் இருப்பதால் இது உங்கள் தைராய்டு ஹார்மோன்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே குறைவான அளவிலேயே சோயாபீனை பயன்படுத்தவும்.



Comments

Popular posts from this blog

The Final Countdown (1980) Tamil Dubbed Movie Download

Movie Info Movie Name :  The Final Countdown (1980) Starring :  Kirk Douglas, Martin Sheen, Katharine Ross, James Farentino Directed by :  Don Taylor Genres :  Action/Adventure Rating :  6.7/10 Source :  BD Rip Language :  Tamil Year :  1980 Description :  A time warp takes the aircraft carrier USS Nimitz and its captain (Kirk Douglas) back to Pearl Harbor, Dec. 6, 1941 Subtitle   The Final Countdown (1980) (Sub Title) The Final Countdown (1980) The Final Countdown HD Sample.mp4 Size : 3.27MB       Download Now... The Final Countdown HD.mp4 Size : 341.66MB       Download Now...

ஆன்லைன் ஷாப்பிங்கில் பொருட்களை சரியான விலைகொடுத்து வாங்குவது எப்படி - Buyhatke

  இன்றைய காலகட்டத்தில் நாம் எந்த பொருட்களை வாங்க நினைத்தாலும் நாம் முதலில் செல்வது ஆன்லைன் வர்த்தக தளங்களுக்குதான் அதிலும் மிக முக்கியமாக எலெக்ட்ரானிக் பொடுட்களான மொபைல், கணினி போன்ற பொருட்கள் அதிகமாக வாங்கப்படுகிறது இதற்கு மிக முக்கியமான காரணம் நாம் வாங்கும் பொருட்கள் சரியில்லை என்றாலோ, திருப்தி அளிக்கவில்லை என்றாலோ அதனை திருப்பி கொடுத்துவிட்டு வேறு மாற்று பொருளையோ  அல்லது பணத்தினையோ திரும்ப பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு நாம் வாங்கும் பொருட்களை நாம் சரியான விலை கொடுத்துதான் வாங்குகின்றோமா என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்வேன். ஏனென்றால் நாம் ஆன்லைன் மூலமாக வாங்கும் எந்த பொருளுமே ஒரே விலையில் இருப்பதில்லை என்பதுதான் உண்மை. நாளுக்குநாள் பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டு கொண்டே தான் இருக்கும். மேலும் தள்ளுபடி என்று சொல்லி விற்க்கப்படும் பொருட்களுமே அதிக இலாபத்தில் விற்கப்படும். இதுபோன்ற பிரச்சினையில் இருந்து விடுபட  Buyhatke  என்னும் மென்பொருள் பன்படுகிறது. இந்த மென்பொருள் கூகுள் குரோம் நீட்சியாகவும், Windows, Android, IOS போன்ற மொபைல் செயலிகளாகவும் கிடைக்கிறது

ரயில் பயணிகள் கவனத்திற்கு! ஜனவரி 1 முதல் திருச்செந்தூர் ரயில்கள் பகுதியாக ரத்து!

  ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்செந்தூர் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இங்கு காணலாம்.   ரயில் பாதை பராமரிப்பு பணிகள்: ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை- திருச்செந்தூர் மற்றும் திருச்செந்தூர் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருநெல்வேலி - திருச்செந்தூர் பிரிவில் செய்துங்கநல்லூர் - ஸ்ரீவைகுண்டம் ரயில் பாதையில் ஜனவரி 1 முதல் ஜனவரி 5 வரை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. திருச்செந்தூர் ரயில்கள் பகுதியாக ரத்து: இதன் காரணமாக பாலக்காடு - திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில் (1 6731/16732) மற்றும் சென்னை - திருச்செந்தூர்- சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் (20605/20606) ஆகியவை ஜனவரி 1 முதல் ஜனவரி 5 வரை திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. திருச்செந்தூரிலிருந்து காலை 12.05 மணிக்கு புறப்படும் திருச்செந்தூர் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில், அடுத்த நாள் காலை 10:15 மணிக்கு பாலக்காடு சென்றடையும். இந்த ரயில் 2