Skip to main content

நீரிழிவை கட்டுப்படுத்த உதவும் சோயாபீன்... அடிக்கடி உணவில் சேர்த்துக்கோங்க...

 நீரிழிவை கட்டுப்படுத்த உதவும் சோயாபீன்... அடிக்கடி உணவில் சேர்த்துக்கோங்க.


தற்போது உலகின் மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ள ஒரு நோய்தான் நீரிழிவு நோய். உலகில் அதிக மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கபட்டுள்ளனர். இந்த நிலையில் நீரிழிவு நோய் குணமாக சோயா பீன் உதவுவதாக கூறப்படுகிறது.




நீரிழிவு நோய் என்பது தற்போதைய 21 ஆம் நூற்றாண்டில் உலகின் பெரும் சுகாதார பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. 2030 ஆம் ஆண்டில் உலக அளவில் சுமார் 366 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவர் என ஒரு ஆய்வு கூறுகிறது. பெரும்பாலும் மக்களின் வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாகவே நீரிழிவு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

நீரிழிவு நோயை நிர்வகிக்க உணவுகளில் மாற்றத்தை செய்ய வேண்டியது அவசியமாகும். இந்த ஆரோக்கியமான உணவுகளில் சோயாபீன் முக்கிய பங்கு வகிக்கிறது. இது கார்போஹைட்ரேட்கள், நார்ச்சத்து, புரதம், பைடோஸ்டெரால், பைடிக் அமிலம், ஐசோஃப்ளேவான் மற்றும் தாதுக்களை கொண்டுள்ளது. இவை நீரிழிவு நோயாளிகளுக்கு பயனளிப்பவையாக உள்ளன. மேலும் நீரிழிவு நோயின் ஆபத்து விகிதத்தை இது குறைக்கிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு சோயாபீன் எவ்வாறு உதவுகிறது என்பதை இப்போது பார்ப்போம்.

​கொழுப்பின் அளவை குறைக்கலாம்

சோயாபீன் பருப்பு வகையை சார்ந்த தானியமாகும். இது கிழக்கு ஆசியாவின் பூர்வீக உணவாக உள்ளது. அங்கு இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சோயாபீன் நீரிழிவு நோயாளிகளுக்கு அவர்களின் உடலில் இன்சுலின் பற்றாக்குறை அல்லது குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை இது தடுக்கிறது.

நீரிழிவு நோயின்போது அது கொழுப்பின் அளவை உயர்த்துகிறது. சோயாபீன் கொழுப்பின் அளவை குறைக்கவும் இன்சுலினின் உணர்திறனை நிர்வகிக்கவும் மேலும் இரத்த குளுக்கோஸை மேம்படுத்தவும் இது உதவும். முக்கியமாக இது காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்தை கொண்டிருப்பதால் இது சர்க்கரை நோயை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

​நார்ச்சத்து நிறைந்தவை

குளுக்கோஸ் அளவை குறைப்பதிலும் மன நிறைவை அளிப்பதிலும் நார்ச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. 100 கிராம் சோயா பீனில் 9.3 கிராம் ஃபைபர் உள்ளது. எலிகளுக்கு சோயாபீன் ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டது. அப்போது சோயாபீன் தரப்படாத எலிகளை விடவும் சோயாபீன் பெற்ற எலிகளுக்கு 60 நிமிடங்களில் உடலில் குளுக்கோஸ் அளவு குறைந்து காணப்பட்டது.

மேலும் இது பழுப்பு அரிசியை விட சிறந்த அளவில் குளுக்கோஸை குறைக்கும். எனவே சோயாப்பீன் உட்கொள்வது என்பது உடலில் உள்ள அதிகப்படியான குளுக்கோஸை குறைக்க உதவுகிறது.

​குறைந்த க்ளைசெமிக்

ஒவ்வொரு உணவுக்கும் ஜி.ஐ மதிப்பெண் என்ற மதிப்பெண் தரப்பட்டுள்ளது. சோயா பீனின் ஜி.ஐ மதிபெண் ஆனது 16 ஆகும். இது மிகவும் குறைந்த அளவிலான ஜி.ஐ மதிப்பை கொண்டுள்ளது. சோயாபீனில் உள்ள காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்து ஆகியவையே இந்த குறைந்த க்ளைசெமிக் குறியீட்டிற்கு காரணமாக உள்ளது. சோயாபீன் உட்கொள்ளும்போது அது குளுக்கோஸின் அளவை மெதுவாக அதிகரிக்கிறது. இதனால் உடலில் அதன் அளவுகள் இயல்பானதாக இருக்கும்.

​ஐசோஃப்ளேவான்கள்

ஒரு ஆய்வின்படி அதிக ஐசோஃப்ளேவான்கள் உள்ளவர்களில் குறைந்த அளவில் மட்டும் குளுக்கோஸ் காணப்பட்டது தெரிய வந்தது. இரண்டாம் வகை நீரிழிவு நோயின் அபாயத்தை குறைப்பதில் ஐசோஃப்ளேவான் மற்றும் சோயாபீன் உட்கொள்ளல் முக்கிய பங்கு வகிக்கிறது. https://www.amazon.in/gp/product/B01FR5WX3E/ref=as_li_qf_asin_il_tl?ie=UTF8&tag=ancollections-21&creative=24630&linkCode=as2&creativeASIN=B01FR5WX3E&linkId=13d735f6c19e7b4e20d1bf487093faa4 ஏனெனில் நமது உணவு முறையே இரத்த குளுக்கோஸ் அளவில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் இது நீரிழிவு நோயின் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது.

​அதிக புரதங்கள்

நீரிழிவு நோயாளிகளுக்கு புரதம் தேவையான மற்றும் முக்கியமான ஒரு ஊட்டச்சத்து ஆகும். ஏனெனில் இது நீரிழிவு நோயாளிகளுக்கு நிலையான ஆற்றலை அளிக்க உதவுகிறது. மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு உள்ள மிகப்பெரும் பிரச்சனையான எடை அதிகரிப்பை கட்டுப்படுத்த இது உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக புரதங்கள் தேவைப்பட்டாலும் அதை அவர்கள் பெருவதில் சிக்கல்கள் உள்ளன.

சிவப்பு இறைச்சியில் அதிக புரதங்கள் இருந்தாலும் விலங்கு மூலங்களில் இருந்து புரதத்தை எடுத்துக்கொள்வது நீரிழிவு நோயை கொண்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. எனவே தாவர அடிப்படையிலான புரத மூலமாக உள்ள சோயாபீன் போன்ற உணவுகளில் புரதத்தை பெறுவதன் மூலம் நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்க முடியும்.

​கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை பாதுக்காக்க உதவுகிறது

சோயாபீன் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் பாதுகாப்பு விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. உடலில் சர்க்கரை அளவுகள் அதிகமாக இருப்பதால் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் வீக்கம் ஏற்படுவதற்கான அபாயங்கள் உள்ளன. சோயாபீனில் உள்ள நார்ச்சத்தானது குளுக்கோஸ் அளவை நிர்வகிக்கவும், கொழுப்பின் அளவை குறைக்கவும் உதவுவது மட்டுமின்றி கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை பாதுகாத்து அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவுகின்றன.

​உணவுக்கு பிறகு ஏற்படும் ஹைப்பர் க்ளைசீமியாவை தடுக்கிறது

ஒரு ஆய்வில் நீரிழிவு நோயாளிகளுக்கு சோயாபீன் உணவுகள் வழங்கப்பட்டது. அப்போது மற்ற உணவுகள் வழங்கப்பட்ட நீரிழிவு நோயாளிகளோடு ஒப்பிடுகையில் அவர்களுக்கு உணவுக்கு பிறகு குளுக்கோஸ் அளவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு சோயாபீன் உகந்தது என இதன் மூலம் அறிய முடிகிறது.

​சோயாபீனை உட்கொள்ள சில டிப்ஸ்

சோயாபீனை கொண்டு செய்யப்படும் உணவுகளை புளித்த மற்றும் புளிக்காத உணவுகள் என இரு வகையாக பிரிக்கலாம். புளித்த சோயா தயாரிப்புகளில் சோயா சாஸ் மற்றும் மிசோ ஆகியவை அடங்கும். ஆனால் புளிக்காத உணவுகளில் சோயா பால், சோயா மாவு மற்றும் சோயா விதைகள் ஆகியவை அடங்கும்.

ஒரு ஆய்வில் மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆசிய மக்கள் குறைவான அளவில் நீரிழிவு நோயை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் அவர்கள் பாரம்பரியமாகவே புளித்த சோயாபீன் தயாரிப்புகளை உட்கொள்கின்றனர்.

பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள், பெப்டைடுகள், ஃபைபர் மற்றும் ஐசோஃப்ளேவான்கள் ஆகியவை சோயாபீனின் ஆண்டிபயாடிக் விளைவுக்கு முக்கிய காரணமாக உள்ளன. இவை இன்சுலின் சுரப்பை மேம்படுத்தவும் தடுக்கவும் உதவுகின்றன.

​கவனிக்க வேண்டிய விஷயங்கள்

சோயா பீன் ஒரு பிரதானமான உணவு ஆகும். ஆகையால் நீங்கள் சோயாபீனை மற்ற உணவுகளுடன் இணைக்கிறீர்கள் என்றால் அவை ஆரோக்கியமான உணவுகள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உதாரணமாக நீங்கள் சோயாபீனை வேக வைத்த உருளைக்கிழங்கு அல்லது அரிசியுடன் சேர்க்கும்போது அது நீரிழிவு எதிர்ப்புக்கு பயனுள்ளதாக இருக்காது. மேலும் இதனால் உங்கள் உடலில் இது குளுக்கோஸ் அளவை அதிகரிக்கலாம்.

சோயாபீன் நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமான உணவாகும். ஆனால் அதற்காக அதை அதிகமாக உட்கொள்ள வேண்டும் என்று அர்த்தமல்ல. ஏனெனில் சோயாபீனை அதிகமாக உட்கொள்வது மலச்சிக்கல், குமட்டல், வீக்கம் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் அதில் உள்ள அதிக ஃபைபர் புரதம் மற்றும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் இருப்பதால் இது உங்கள் தைராய்டு ஹார்மோன்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே குறைவான அளவிலேயே சோயாபீனை பயன்படுத்தவும்.



Comments

Popular posts from this blog

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க...

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க... யாருக்கு தான் இந்த ஆசை இருக்காது. நாமும் நல்ல வசதியோடு எந்த கஷ்டமும் இல்லாம, அள்ள அள்ள பணம் குறையாம இருக்கணும்னு. ஆனால் நம்மில் பெரும்பாலானோர் அப்படி ஆசைப்படுவதோடு நிறுத்தி விடுகிறோம். அதற்கான முயற்சிகளை எடுப்பதே இல்லை. தொழில் விருத்தி சிலருக்கு வாழ்க்கையில் நல்ல தொழில் இருக்கும். அதை விருத்தி செய்ய எல்லா விதமான முயற்சிகளையும் செய்து கொண்டே இருப்பார்கள். ஆனாலும் அதிர்ஷ்டம் என்பது கடவுள் நம்பிக்கை என்பதுவும் கூட முக்கியமல்லவா?... அதனாலேயே சிலருடைய அவ நம்பிக்கையால் தான் என்ன முயற்சி செய்தாலும் அது வெற்றியடையாமலோ அல்லது கால தாமதமோ ஆகிவிடுகிறது தன லாபம் உங்களுடைய வீட்டில் எப்போதும் தன ஆகர்ஷணம் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டுமென்றால்அதற்கு சின்ன சின்ன பரிகாரங்கள் உள்ளன. அதை முழு மனதோடு நம்பி செய்தாலே போதும் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாமல் இருந்து கொண்டே இருக்கும். அப்படி என்ன பரிகாரங்கள் என்ன வேண்டும் என்று பார்ப்போம். பரிகாரம்  சின்ன சின்ன தெய்வா...

தஞ்சாவூர்-கும்பகோணம் பைபாஸ் ரைடர்ஸ் பஸ் இயக்கம்

இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே  தேசிய நெடுஞ்சாலை வழியாக புதிய நேரடி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பயண நேரம் வெகுவாக குறைந்துள்ளது. இதை மக்கள் மற்றும் பயணிகள் வரவேற்றுள்ளனர்.  தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும். இதனால் இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. இந்த பேருந்து சேவை ஒரு நாளைக்கு 18 முறை இயக்கப்படுகிறது. கும்பகோணத்தில் இருந்து காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பேருந்து புறப்படும். தஞ்சாவூரில் இருந்து காலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை பேருந்து இயக்கப்படும். இந்த புதிய பேருந்துகள் "பைபாஸ் ரைடர்ஸ்" சேவையின் ஒரு பகுதியாக இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் NH 36-ல் தஞ்சாவூர் - சோழபுரம் இடையே இயக்கப்படுகின்றன. 50 கி.மீ தூரத்தை இப...

மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்!

  மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்! மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் செம்மங்குளம் அருகே தனியார் பள்ளியில் சிறுத்தை முகாமிட்டிருப்பதால் அப்பள்ளிக்கு இன்று விடுமுறையை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் அருகே பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் திடீரென சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. தற்போது சிறுத்தையின் நடமாட்டத்தை சிசிடிவி கேமரா மூலம் வனத்துறையினரும் கல்வித் துறை அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் அங்கும் இங்குமாக சிறுத்தை நடமாடிக் கொண்டே இருக்கிறது.