Skip to main content

95 ரூபாய் முதலீடு... 14 லட்சம் வருமானம்... போஸ்ட் ஆபீஸ் திட்டம்!

 With 95 Rupees Daily Investment You Can Get 14 Lakh Rupees In 20 Years


கொரோனா வந்தபிறகு மக்கள் அனைவருக்கும் சேமிப்பின் முக்கியத்துவம் தெரியவந்துள்ளது. திடீரென ஏற்படும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க கைவசம் சேமிப்புப் பணம் இருந்தால் பெரிதும் உதவும். நீங்கள் பணத்தைச் சேமிக்க தபால் நிலையங்கள் சிறந்த தேர்வாக இருக்கும். இந்தியத் தபால் துறையானது பொதுமக்களின் சேமிப்புப் பழக்கத்தினை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒரு திட்டம்தான் கிராம் சுமங்கல் கிராமின் யோஜனா.


இத்திட்டம் கிராமப்புற மக்களுக்காகவே உருவாக்கப்பட்டு சிறப்புத் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் ஆறு பிரிவுகளாக காப்பீடு வழங்கப்படுகிறது. 19 வயது முதல் இத்திட்டத்தில் இணையலாம். அதிகபட்ச வயது வரம்பு 45 ஆண்டுகள் ஆகும். 20 ஆண்டுகளில் ரூ.7 லட்சம் காப்பீடு கிடைக்க வேண்டுமென்றால் நீங்கள் மாதத்துக்கு 2,853 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும். அதாவது ஒரு நாளைக்கு 95 ரூபாய். 15 வருட பாலிசியில் 6 மாதம், 9 மாதம், 12 மாதம் என 20 சதவீத கேஷ் பேக் கிடைக்கும். ஒருவேளை 20 வருட பாலிசியைத் தேர்வுசெய்தால் 8,12,16 மாதங்களில் கிடைக்கும்.


உங்களது 25ஆவது வயதில் 20 ஆண்டு முதிர்வு கொண்ட பாலியை எடுத்தால் 20 ஆண்டுகளில் உங்களால் ரூ.14 லட்சம் சம்பாதிக்க முடியும். இத்திட்டத்தில் இணைந்த பாலிசிதாரர் ஒருவேளை முதிர்வு காலத்துக்கு முன்னரே இறந்துவிட்டால் அவரது நாமினிக்கு உறுதித் தொகையும் போனஸ் தொகையும் வழங்கப்படும்.

Comments

Popular posts from this blog

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க...

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க... யாருக்கு தான் இந்த ஆசை இருக்காது. நாமும் நல்ல வசதியோடு எந்த கஷ்டமும் இல்லாம, அள்ள அள்ள பணம் குறையாம இருக்கணும்னு. ஆனால் நம்மில் பெரும்பாலானோர் அப்படி ஆசைப்படுவதோடு நிறுத்தி விடுகிறோம். அதற்கான முயற்சிகளை எடுப்பதே இல்லை. தொழில் விருத்தி சிலருக்கு வாழ்க்கையில் நல்ல தொழில் இருக்கும். அதை விருத்தி செய்ய எல்லா விதமான முயற்சிகளையும் செய்து கொண்டே இருப்பார்கள். ஆனாலும் அதிர்ஷ்டம் என்பது கடவுள் நம்பிக்கை என்பதுவும் கூட முக்கியமல்லவா?... அதனாலேயே சிலருடைய அவ நம்பிக்கையால் தான் என்ன முயற்சி செய்தாலும் அது வெற்றியடையாமலோ அல்லது கால தாமதமோ ஆகிவிடுகிறது தன லாபம் உங்களுடைய வீட்டில் எப்போதும் தன ஆகர்ஷணம் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டுமென்றால்அதற்கு சின்ன சின்ன பரிகாரங்கள் உள்ளன. அதை முழு மனதோடு நம்பி செய்தாலே போதும் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாமல் இருந்து கொண்டே இருக்கும். அப்படி என்ன பரிகாரங்கள் என்ன வேண்டும் என்று பார்ப்போம். பரிகாரம்  சின்ன சின்ன தெய்வா...

தஞ்சாவூர்-கும்பகோணம் பைபாஸ் ரைடர்ஸ் பஸ் இயக்கம்

இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே  தேசிய நெடுஞ்சாலை வழியாக புதிய நேரடி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பயண நேரம் வெகுவாக குறைந்துள்ளது. இதை மக்கள் மற்றும் பயணிகள் வரவேற்றுள்ளனர்.  தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் இடையே புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும். இதனால் இரண்டு ஊர்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும். முன்பு 90 நிமிடங்களாக இருந்த பயணம், இப்போது ஒரு மணி நேரமாக குறைந்துள்ளது. இந்த பேருந்து சேவை ஒரு நாளைக்கு 18 முறை இயக்கப்படுகிறது. கும்பகோணத்தில் இருந்து காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பேருந்து புறப்படும். தஞ்சாவூரில் இருந்து காலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை பேருந்து இயக்கப்படும். இந்த புதிய பேருந்துகள் "பைபாஸ் ரைடர்ஸ்" சேவையின் ஒரு பகுதியாக இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் NH 36-ல் தஞ்சாவூர் - சோழபுரம் இடையே இயக்கப்படுகின்றன. 50 கி.மீ தூரத்தை இப...

மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்!

  மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்! மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் செம்மங்குளம் அருகே தனியார் பள்ளியில் சிறுத்தை முகாமிட்டிருப்பதால் அப்பள்ளிக்கு இன்று விடுமுறையை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் அருகே பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் திடீரென சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. தற்போது சிறுத்தையின் நடமாட்டத்தை சிசிடிவி கேமரா மூலம் வனத்துறையினரும் கல்வித் துறை அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் அங்கும் இங்குமாக சிறுத்தை நடமாடிக் கொண்டே இருக்கிறது.