தமிழகம் முழுவதும் மின் கட்டணம் செலுத்தாத உள்ள 7.84 லட்சம் மின் இணைப்புகளை துண்டிக்குமாறு மின் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அனைத்து மேற்பார்வை பொறியாளர்களுக்கு மின்வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகள் பல மின் கட்டணம் செலுத்தாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
TNEB Notification
இவ்வாறு மின் கட்டணம் செலுத்தாத மின் இணைப்புகளுக்கு உடனடியாக மின்இணைப்பை துண்டிக்குமாறு மேற்பார்வை பொறியாளர்களுக்கு பலமுறை கடிதங்கள் மற்றும் குறிப்புகள் மூலம் தெரிவித்தும், அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
EB Cut
கடந்த மாதம் வரையிலான அறிக்கையின்படி, அரசு மின் இணைப்புகளில் 7 லட்சத்து 84 ஆயிரத்து 721 மின் இணைப்புகள் கட்டணம் செலுத்தாமல் உள்ளது.
EB Bill Payment
இந்த மின் இணைப்புகள் இதுவரை துண்டிப்பு செய்யப்பட வில்லை. இதனால் மின் வாரியத்திற்கு ரூபாய் 199.81 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
EB Connection Disconnected
எனவே மின் கட்டணம் செலுத்தாத மின் இணைப்புகளை உடனடியாக துண்டிக்குமாறு கொடுக்குமாறு மேற்பார்வை பொறியாளர் அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment