முடி உதிர்வுக்கு சத்துபாடு குறைவும் ஒரு காரணமாக சரும பராமரிப்பு நிபுணர்கள் கூறியதை பார்த்தோம். அதை தவிர்க்க என்னவெல்லாம் செய்யலாம் என்பதை பார்க்கலாமா?
முடி உதிர்வுக்கு காரணம் பராமரிப்பு தாண்டி சத்துகுறைபாடாகவும் இருக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்வதை பார்த்தோம். இவை நிச்சயம் சத்துகுறைபாடு தான் என்பதை நீங்களே பரிசோதனை செய்யலாம். அதுவும் உங்கள் முடியை கொண்டு. தலையில் முடி யின் எண்ணிக்கையில் 100-ஐ எடுத்துகொண்டு இலேசாக ஈரமாக்குங்கள்.
அவை சிக்கில் லாமல் இருக்கட்டும். இப்போது அதன் வேர்ப்பகுதியில் ஒரு விரலை அழுத்தி பிறகு அதன் நுனியில் ஒரு அழுத்தம் கொடுத்து மேலாக்க இழுத்துவிடுங்கள்.
அப்படி இழுக்கும் போது உங்கள் கையில் முடி வந்திருக்கும். கையில் 6 அல்லது 8 முடி வரை இருந்தால் அவை சாதாரணமானது. சற்று பராமரிப்பு தேவைப்படும் என்று சொல் லலாம். ஆனால் அவையே அதிகமாகும் போது 10 க்கும் மேற்பட்ட முடி உங்கள் கைகளில் வந்தால் அது நிச்சயம் முடி உதிர்வு பிரச்சனை தான். குறிப்பாக சத்து குறைவதால் தான் என்பதை உணர்ந்துகொள்ளலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இது பலருக்கும் இருக்கும் கேள்வி. முடி உதிர்வு உறுதியாகிவிட்டது. அதனால் தினமும் தலைக்கு ஷாம்பு போட்டு குளிக்கலாமா? அப்படி குளித்தால் முடியின் வேர்க்கால்கள் பலவீனமாகி முடி கொட்டுவது அதிகரிக்குமா என்ற சந்தேகம் உண்டு. ONION SHAMPOO FOR HAIR LOSS இன்னும் சிலர் முடியை காப்பாற்ற வாரம் ஒரு நாள் தலைக்கு குளித்தால் போதுமா என்றும் கேட்பதுண்டு.
அதற்கு முன்பு நீங்கள் எந்தமாதிரியான ஷாம்புவை உபயோகிக்கிறீர்கள் என்பதை கவனியுங்கள். பொடுகு தீர்க்கும் ஷாம்புவா (மருத்துவர்களின் ஆலோசனையோடு) வறட்சியடைந்த கூந்தலுக்காக சிறப்பான தயாரிப்பா என்பதை உங்கள் சருமபராமரிப்பு நிபுணரிடம் ஆலோசனை செய்யுங்கள்.
முடி வேர்ப்பகுதி எண்ணெய் பசை கொண்டிருந்தால் நீங்கள் தினமும் தலைக்கு ஷாம்பு போட்டு குளிக்கலாம். வாரத்துக்கு இரண்டு முறை தலைக்கு குளித்துவிடுங்கள். இவை முடி உதிர்வு பாதிப்பை அதிகரிக்காது.
எண்ணெய் வைக்கலாமா அல்லது மசாஜ் செய்யலாமா?
தினமும் தலைக்கு எண்ணெய் வைக்கலாமா என்ற சந்தேகமும் சிலருக்கு உண்டு.முடி உதிர்தலை தவிர்க்க ONION HAIR OIL ஜ உபயோகிக்கவும் ஆனால் எண்ணெய் வைப்பது இயல்பாகவே முடிக்கு தனியாக போஷாக்கு கொடுக்கும். குறிப்பாக ஆயில் மசாஜ் செய்வதன் மூலம் முடிக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
இதனால் முடியின் வேர்க்கால்களுக்கு தேவையான சத்தும் ஊட்டமும் முடிக்கு நிறைவாக கிடைக் கும். அதோடு மசாஜ் செய்யும் போது டென்ஷன் குறைந்து மனம் நிம்மதி அடைவது தனி பலன் என்றும் சொல்லலாம்.
எண்ணெய் வைப்பதால் வெளியில் செல்லும் போது முடி ஒட்டி தெரிகிறது என்று சொல்ப வர்கள், தலைக்கு குளிப்பதற்கு அரைமணி நேரம் முன்பு தலையில் வேர்க்கால் பகுதியில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்து ஊறவிடலாம்.
இன்னும் கொஞ்ச நேரம் ஊறவேண்டும் என்று நினைப்பவர்கள் முன் தினம் இரவு எண்ணெய் வைத்து ஊறவிட்டு மறுநாள் காலை தலைக்கு குளிக்கலாம். ஆயில் வைத்து வெளியில் செல்லும் போது வெளியில் இருக்கும் தூசுகளை தலைமுடி வேகமாக இழுத்துகொள்ளும். இதனாலும் முடி உதிர்வு அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஷாம்பு பயன்படுத்தும்போது
தினமும், இரண்டு நாளைக்கு ஒருமுறை, வாரத்துக்கு மூன்று முறை என்று உங்கள் முடி யின் தன்மையை பொறுத்து தலைக்கு குளிக்கலாம். ஆனால் ஷாம்பு பயன்படுத்தும் போது மிக முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டியது
பலரும் செய்யும் தவறும் இதுதான். ஷாம்புவை நேரடியாக முடியில் படுமாறு பாட்டிலிலிருந்து கவிழ்ப்பார்கள். இவை முடியை மேலும் வறட்சிக்குள்ளாக்கி ட்ரை ஆக்கிவிடும்.
அதே போல அழுக்குகள் அதிகம் படர்ந்திருக்கும் முடியின் வேர்ப்பகுதியை விடுத்து முடிபகுதியில் தேய்த்து குளிக்கும் போதும் இந்த பிரச்சனைஇருக்கும். இதனால் வேர்ப்பகுதியில் இருக்கும் அழுக்கு அப்படியே தலையில் தங்கிவிடும்.
ஷாம்பு பயன்படுத்தும் போது சரிபாதியாக அதனுடன் சுத்தமான நீர் கலந்து முடியின் வேர்ப்பகுதியில் படுமாறு தேய்த்து குளிக்க வேண்டும். இதனால் ஷாம்புவில் இருக்கும் கெமிக்கல் முடியை அதிகம் பாதிக்காது. அதே நேரம் முடிக்கு போதுமான அளவு ஷாம்பு பயன்படுத்தினாலே போதும். அதிக ஷாம்பு பயன்படுத்தினால் தான் முடி ஆரோக்கியமாக இருக்கும் என்பதும் தவறான கருத்து.

Hair Fall , hair loss,hair loss treatment,hair loss cure,how to stop hair loss,hair loss causes,hair loss in women,hair loss treatment for women,female hair loss,hair loss treatment for men,hair loss tips,prp for hair loss,hair loss solution,reasons for hair loss,hair loss men,stop hair loss,hair loss women,women hair loss,teenage hair loss,hair loss reasons,tips for hair loss,causes of hair loss,hair loss remedies,hair loss prevention,how to treat hair loss,treatment for hair loss
Comments
Post a Comment