Skip to main content

பண்டிகை கால சிறப்பு ரயில்கள்: இதோ 196 ஜோடி ரயில்களின் முழு விவரம்!

அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ளதை அடுத்து, சிறப்பு ரயில்களுக்கு மத்திய ரயில்வேத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.





நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் அமலுக்கு வந்த ஊரடங்கு காரணமாக ரயில் போக்குவரத்து முடங்கியது. கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ரயில் சேவை நிறுத்தப்பட்டன. இதையடுத்து ஷரமிக் சிறப்பு ரயில்கள் என்ற பெயரில் புலம்பெயர் தொழிலாளர்கள் வீடு திரும்பும் வகையில் மே ஒன்றாம் தேதி முதல் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ரயில்கள் இயக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு புதிதாக 230 ரயில்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் கூடுதலாக 80 ரயில்கள் செப்டம்பர் 12ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வந்தன. சமீபத்தில் இந்திய ரயில்வே சார்பில் குளோன் ரயில்கள்’ அறிமுகம் செய்யப்பட்டன.

இது பயணிகளின் அதிகப்படியான பயணத் தேவையைக் கருத்தில் கொண்டு முதல்முறையாக பயன்பாட்டிற்கு வந்துள்ளன. தற்போதுவரை முக்கிய வழித்தடங்களில் மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதாவது 300 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் வழக்கமான சேவையாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த சூழலில் துர்கா பூஜை, தசரா, தீபாவளி, சாத் பூஜை என வரிசையாக பண்டிகைகள் வரவுள்ளன. இதையொட்டி பொதுமக்கள் அதிகளவில் வெளியூர்களுக்கு பயணம் செய்வர். எனவே கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.


தீபாவளிக்கு 200 சிறப்பு ரயில்கள்..! சென்னையில் இருந்து எவ்வளவு ட்ரைன்?

இந்நிலையில் 196 ஜோடி பண்டிகை கால சிறப்பு ரயில்களுக்கு (392 ரயில்கள்) அனுமதி அளித்து மத்திய ரயில்வேத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான பயணக் கட்டணம் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களை ஒத்திருக்கும்.




குறிப்பாக கொல்கத்தா, பாட்னா, வாரணாசி, லக்னோ உள்ளிட்ட நகரங்களைச் சென்றடைய பண்டிகை கால சிறப்பு ரயில்கள் உதவிகரமாக இருக்கும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ரயில்வே மண்டலங்கள் விரைவில் அறிவிப்பு வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதுபற்றி ரயில்வே ஆணையம் கூறுகையில், பண்டிகை கால சிறப்பு ரயில்கள் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும். கட்டணத்தில் பெரிதாக மாற்றம் இருக்காது என்று தெரிவித்துள்ளது.








Comments