Skip to main content

Posts

KOTAK BANK ACCOUNT OPEN LINK

No need to step out of your house to complete your KYC! Open a Kotak 811 Savings A/c now and complete your KYC on a video call.  Click here

ரூ.600 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் விற்காமல் தேங்கியதால் உற்பத்தி ஆலை உரிரமயாளர்கள் பெரும் பாதிப்பு

சென்னை: ரூ.600 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் விற்காமல் தேங்கியதால் உற்பத்தி ஆலை உரிரமயாளர்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.  ராஜஸ்தான், ஒடிசா, அரியானா, டெல்லி உள்ளிட்ட 7 மாநிலங்கள் பட்டாசு வெடிக்க தடை விதித்தன. வடமாநிலங்கள் பட்டாசு வெடிக்க தடை விதித்ததால் ரூ.600 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் தேங்கின.  குறைந்த தொகையை முன்பணமாக பெற்றுக்கொண்டே பல கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் அனுப்பப்படுகின்றன.

இன்றைய ராசிபலன் 14/11/2020 சனிக்கிழமை தீபாவளி பலன்கள் Rasi Palan Diwali

  இன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்கள் ஆதாயமடைவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள். மிதுனம் மிதுனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வேற்று மதத்தவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் நெளிவுசுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.  கடகம் கடகம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். புது வேலை கிடைக்கும். நவீன சாதனங்கள் வாங்குவீர்க...

"இந்த 'ஆப்' டவுன்லோட் பண்ணுங்க..."- ரூ.9 லட்சத்தை மோசடி செய்த கும்பல்..!

இப்போதெல்லாம் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்கும் கும்பலை விட ஆன்லைனில் கொள்ளையடிக்கும் கும்பல் அதிகமாகிவிட்டது.  பணபரிவர்த்தனைகள் ஆன்லைன் உலகுக்குள் வந்தபின்னர் பல நன்மைகள் ஏற்பட்டுள்ளன. நேரம் மிச்சம் ஆகியுள்ளது. அதேவேளையில் ஆன்லைன் ஏமாற்றுக்காரர்களின் கைகளிலும் சிக்கியுள்ளது. பயனாளர்கள் மிகக்கவனமாக இருந்தால் மட்டுமே அவர்களிடம் இருந்து நம் பணத்தை பாதுகாக்க முடியும் என்ற நிலைதான் தற்போது உள்ளது. நாக்பூரில் ஒரே போன்கால் மூலம் ரூ.9 லட்சத்தை இழந்துள்ளார் ஒருவர். கோரடி பகுதியில் வசித்து வரும் அசோக் மேன்வட் என்பவரின் செல்போனுக்கு மர்மநபர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார். அப்போது அசோக்கின் செல்போனை அவரது 15வயது மகன் பயன்படுத்தியுள்ளார். எதிர்முனையில் பேசிய மர்மநபர் டிஜிட்டர் பரிவர்த்தனை நிறுவனத்தில் இருந்து பேசுகிறேன். உங்கள் அப்பாவின் செல்போனில் நான் சொல்லும் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் எனக் கூறியுள்ளனர். அவர்கள் கூறிய செயலியானது வேறொரு இடத்தில் இருந்து செல்போனை இயக்கும் ரிமோட் செயலி. செல்போனில் செயலியை பதிவிறக்கம் செய்தவுடனேயே செல்போனுடன் இணைக்கப்பட்டிருந்த வங்கிக் கணக்...

மாநிலம் முழுவதும் 55 இடங்களில் 144 தடை உத்தரவு.! போலீஸ் குவிப்பு., நாளை வெளியாக போகும் மக்களின் தீர்ப்பு.! 8 ஆயிரம் துணை இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில்.!

பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் 28-ந் தேதி, கடந்த 3-ந் தேதி, 7-ந் தேதி என 3 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, நாளை 55 மையங்களில் நடக்கிறது. மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள அறைகளில் தலா 7 மேஜைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் உள்ள 14 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகளும் ஒரே ஒரு மையத்தில் எண்ணப்படுகிறது.இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதலில் துணை ராணுவப்படையும், இரண்டாவதாக பீகார் ராணுவ போலீசும், வெளிவட்டத்தில் மாவட்ட போலீசும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். பாதுகாப்பது பணியில் துணை ராணுவத்தினர் மட்டும் சுமார் 8 ஆயிரம்பேர் ஈடுபடுவார்கள். ஓட்டு எண்ணும் மையங்களிலும், அந்...